states

img

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் விஷமத்தனமான அணுகுமுறை!

புதுதில்லி, மே 4 - விபுல் ஷா தயாரிப்பில்  இயக்குநர் சுதிப்தோ சென்  இயக்கத்தில், அடா சர்மா,  சித்னி இட்னானி உள்ளிட் டோர்  நடிப்பில் உருவாகி யுள்ள திரைப்படம் ‘தி  கேரளா ஸ்டோரி’. இந்தி,  தமிழ், தெலுங்கு, மலை யாள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் மே 5 அன்று திரைக்கு வருகிறது. கேரளத்தைச் சேர்ந்த 4 பெண்கள், கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குவதாகவும், அவர்களில் முஸ்லிமாக இருக்கும் ஒரு பெண், மற்றவர்களை மூளைச் சலவை செய்து, முஸ்லிமாக மதமாற்றம் செய்வதாக வும், பின்னர் அவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதும்தான் இத்திரைப்படத்தின் மையக்கருத்தாகும். இவ்வாறு, கேரளத்தைச் சேர்ந்த 32 ஆயிரம்பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு பொய்யான பிரச்சாரத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ முன்னெடுத்துள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உட்பட பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  சமூகத்தைத் துண்டாடும் இதுபோன்ற படத்தை வெளியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். நீதி மன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன. இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு, புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமும்  தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் அவர், “ஒரு காலத்தில் ஆட்சிக்கு வர மக்களை ஒன்றிணைத்தார்கள். 

இப்போது நீங்கள் (பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்கள்) மக்களிடம் வெறுப்பூட்டி மக்களைப் பிரித்து ஆட்சிக்கு வர முயலுகிறீர்கள். இது போன்ற நச்சுத்தன மான அணுகுமுறையால் மக்களாகிய நாங்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம். ஜெய்ஹிந்த்!” என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரபல ஆபாச பிரச்சார படமான “தி காஷ்மீர்  பைல்ஸ்” (The Kashmir Files) திரைப்படம் போலத் தான், ‘தி கேரளா ஸ்டோரி’யும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சமூகத்தை இழிவுபடுத்துகிறது: கபில் சிபல் “தணிக்கை வாரியத்தால் அனுமதி அளிக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் விஷத்தை பரப்புகிறது.  அத்துடன் ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்து கிறது” என்று ஒன்றிய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் விமர்சித்துள்ளார். “கர்நாடகாவில் சமூகத்தை பிளவுப்படுத்தும் அரசி யலை காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று பிரதமர் மோடி  கூறுகிறார். இது உண்மைக்கு புறம்பானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.