states

இந்திய அமைச்சர் பேசியது விளம்பர உரையாகவே இருந்தது ருமேனிய மேயர் காட்டம்

புதுதில்லி, மார்ச் 7- “இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பேச்சு, விளம்பர உரை யாகவே இருந்தது” என்று ருமேனிய மேயர் கூறியுள்ளார். உக்ரைனிலிருந்து தப்பி ருமேனியாவுக்கு வந்த இந்திய மாணவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிந்தியா பேசிக் கொண்டிருக்கும்போது, ருமேனிய மேயர் ஹாங்கில் குறுக் கிட்டுப் பேசியதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், ருமேனியாவின் ஸ்னாகோவ் பிராந்திய மேயர், ஹாங்கில் அளித்த பேட்டியில் ஒன்றி இதுகுறித்து கூறும்போது, ‘‘போர் காரணமாக உக்ரைனிலிருந்து தப்பித்து 157 இந்திய மாணவர்கள் ஸ்னாகோவ் பிராந்தியத்துக்கு வந்த னர். இந்தியத் தூதரகம் மூலம் அந்த மாணவர்களுக்கு சிறிய உதவி கிடைத்தது.  உணவு மற்றும் பிற தேவைகள் அனைத்தும் எங்களால் வழங்கப்பட்டன. ஸ்னாகோவ் பிராந்தியத்தின் குடிமக்களே அனைத்தையும் மாணவர்களுக்கு வழங்கினர். இந்த நிலை யில், மாலையில் ஒருவர் (ஒன்றிய அமைச்சர் சிந்தியா) அறைக்கு கேமராக்களுடன் வருகை தந்தார். அவர் மாணவர்களிடம் மிகவும் மூர்க்கத்தனமான தொனி யில் பேசுவதைக் கண்டேன். அவர் தனது விளம்பர உரையைத் தொடங்கினார். அவர் போர் பூமியை விட்டு வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதலாக எந்த வார்த்தையும் கூறவில்லை. அவர் ஒரு விளம்பர உரையை முன்வைக்கத் தயாராக இருந்தார், போரிலிருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை’’ என்று விளக்கம் அளித்தார்.