states

உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக பி.கே. மிஸ்ரா, விஸ்வநாதன் பதவியேற்பு!

புதுதில்லி, மே 19 - உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி. விஸ்வ நாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த எம்.ஆர். ஷா, தினேஷ் மகேஸ்வரி ஆகி யோர் சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற னர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதி கள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம், இரு  காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற் கான பரிந்துரைகளை வழங்க ஒருமனதாக தீர்மானித்தது.  அதன்படி, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார்  மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகி யோர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்து ரைக்கப்பட்டனர். இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய சட்ட அமைச்ச கம், அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், நீதிபதி பி.கே. மிஸ்ரா  மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வ நாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதி களாக நியமனம் செய்து, குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு வியாழக்கிழமையன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த நியமனம் குறித்த உத்தரவை புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் டுவிட்டரில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, நீதிபதி பி.கே. மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் காலியாக இருந்த 2 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகள் என்ற தனது முழுமையான எண்ணிக்கையை எட்டியுள்ளது. எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் ஓய்வுபெற உள்ளனர். வரும் வெள்ளிக்கிழமைதான் (மே 26) அவர்களின் கடைசிப் பணி நாளாக இருக்கும் என்பதால், விரைவிலேயே 3 இடங்கள் காலியாக உள்ளன.

வழக்கமாக, கொலீஜியம் பரிந்துரை களை கிடப்பில் போடுவதே ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தின் வேலையாக இருந்து வந்தது. கிரண் ரிஜிஜூ சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை நிறுத்தி வைத்தார். இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து, புவியியல் துறைக்கு மாற்றப்பட்டு, அர்ஜூன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின்னணியில், அன்றைய நாளே 2 நீதிபதிகளின் நியமனத்திற்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டு, புதிய நீதிபதிகள் பதவி யேற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நீதிபதி கே.வி. விஸ்வ நாதன், கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1988ல் தமிழ்நாடு பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டவர் ஆவார். உச்ச நீதி மன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, வழக்கறிஞராக தொழில் செய்து வந்த  இவர், கடந்த 2009-இல் மூத்த வழக்கறி ஞராக அறிவிக்கப்பட்டார். உச்சநீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகளில் நீதி மன்றத்துக்கு உதவும் வகையில் நீதிமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர் ஆவார். தற்போது நீதிபதி யாகி இருக்கும் கே.வி. விஸ்வநான், 2030-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

ரிஜிஜூ மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம்

ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ திடீரென அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதிகாரமற்ற பதவியாக கருதப்படும் புவி அறிவியல் துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ள ரிஜிஜூ குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் விமர்சனங்களை வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “தோல்வியடைந்த சட்ட அமைச்சர், தற்போது புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவரால் தற்போது என்ன செய்ய முடியும்?” என்று கேட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், ‘உலகின் மிகப்பெரிய கட்சியெனக் கூறிக் கொள்ளும் கட்சியால், முழுநேர சட்ட அமைச்ச ரைக் கூடக் கண்டறிய முடியவில்லை.

இது அக்கட்சியில் திறமையான அமைச்சா்கள் காணப்பட வில்லை என்பதை மட்டுமல்லாமல், அரசின் திறனின்மையையும் வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ரிஜிஜுவால் சட்டங்களின் பின்னால் உள்ள அறி வியலைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தற்போது புவி அறிவியல் துறையில், அறிவியலுக்குப் பின்னால் உள்ள சட்டங்களையாவது புரிந்து கொள்ள முயற்சிப்பாராக!” என்று கிண்டலடித்துள் ளார். சட்டத் துறைக்கு ரிஜிஜு ஏற்கெனவே பல்வேறு இழப்புகளை ஏற்படுத்திவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தாமதமாகவே அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, தன்மீதான விமர்சனங்களுக்கு, ஒன்றிய புவியியல் துறை அமைச்சர் ரிஜிஜூ பதிலளித்துள்ளார். அதில், “இலாகா மாற்றம் தண்டனை அல்ல” என கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் என்னைப் பற்றி விமர்சிப்பதும், எனக்கு எதிராகப் பேசுவதும் புதிதல்ல. அமைச்சரவை மாற்றம் என்பது அரசின் முடிவு, பிரதமரின் பார்வை எனவும் கிரண் ரிஜிஜூ சமாளித்துள்ளார்.