புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
புதுதில்லி, மே, 28- புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த முயன்ற மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை தில்லி காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக கைதுசெய்து, தில்லி ஜந்தர் போராட்டக்களத்தை அப்பு றப்படுத்தியுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவ ரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மே 23 அன்று மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மெழுகு வர்த்தி ஊர்வலம் நடத்தினர். ஆனால் மோடி அரசு எதையும் கண்டுகொள்ளாமல் போல அமைதி காத்தது. இந்நிலையில், ஞாயி றன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாக செல்ல மல்யுத்த வீரர் - வீராங் கனைகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பேரணிசெல்ல தயாராகும் பொழுதே மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை தில்லி போலீசார் வலுக்கட்டாயமாக கைதுசெய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
குற்றவாளிகளை போல் இழுத்துச் சென்ற கொடூரம்
டாளுமன்றம் நோக்கிப் பேரணியை முன்கூட்டியே அறிந்திருந்த தில்லி காவல் துறை ஜந்தர் மந்தரில் பாதுகாப்பைத் தீவி ரப்படுத்தியது. தில்லியின் சிங்கு எல்லை, திக்ரி எல்லை, அம்பாலா எல்லை, காஜிபூர் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் பகுதி யை விட்டு வெளியேற அனுமதி கிடையாது என தடுப்பை அமைத்து எச்சரிக்கை விடுத் தது தில்லி காவல்துறை. ஆனால் பேரணி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வினேஷ் போகத், அவரின் சகோ தரி சங்கீதா போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் குழு மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் குழு தடுப்பு களைக் கடக்க முயன்றனர். தொடர்ந்து பேர ணியாகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்க னைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போலீசார் மல்யுத்த வீரர் - வீராங்கனைகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் வீராங்கனைகளை கீழே தள்ளி, தாக்குதல் நடத்தி வலுக்கட்டாய மாக இழுத்து வேனில் ஏற்றி கைது செய்தனர். மல்யுத்த வீரர் - வீராங்கனை கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.
ஜனநாயகம் கொல்லப்படுகிறது
காவல்துறை எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள், ஆனால், அமைதியாகப் போராட்டம் நடத்தும் எங்களை காவல் துறை தடுத்து நிறுத்துகிறார்கள்,” என்றார். மல்யுத்த வீரர்களை மட்டுமல் லாது அவர்களது ஆதரவாளர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ள னர்.
‘கேவலமான முகம் வெளிப்பட்டது’
புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மல்யுத்த நட்சத்திரங்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”பிரதமர் மோடி ஒருபுறம் ஜனநாயகத்தைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, சில மீட்டர் தொலைவில் மோடி அரசாங்கத்தின் உண்மையான, கேவலமான முகம் இப்படி வெளிப்பட்டது.அடடா!” என்று பதிவிட்டுள்ளார்.
‘மக்களின் குரலை நசுக்குகிறார்’
புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மல்யுத்த வீரர் - வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கைது செய்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக-வை கடுமையாக சாடியிருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ”முடிசூட்டு விழா முடிந்துவிட்டது. ஆணவ மன்னன், தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்” என பதிவிட்டுள்ளார்.
‘செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது’
தில்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்க னைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இது வரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்க னைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?” எனக் கூறியுள்ளார்.
இது என்ன வகையான போக்கிரித்தனம்?
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இட்டிருந்த டுவிட்டர் பதிவில்,”மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மற்றும் வயதான தாய்மார்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், ஜந்தர் மந்தரில் எங்கள் பேர ணியை கலைக்கத் தொடங்கியுள்ளனர். எங்கள் உடைமைகள் எடுக்கப்படுகின்றன போராட்டத்தை அப்புறப்படுத்தும் பணி யை தில்லி போலீசார் தொடங்கிவிட்டனர் இது என்ன வகையான போக்கிரித்தனம்?” என்று என கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டக்களத்தை அப்புறப்படுத்திய காவல்துறை
மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கைது செய்ததை சாதகமாக பயன்படுத்தி போராட்டக்களத்தை தில்லி காவல்துறை அப்புறப்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனைகளை பேருந்துகளில் ஏற்றிய பிறகு, அந்த இடத்திலிருந்த அவர்களது உடைமைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டது. தொடர்ந்து கூடாரங்கள், கட்டில், குளிரூட்டிகள், பாய்கள், தார்பாய் களை போலீசார் பலவந்தமாக அகற்றி பொருட்களை லாரிகளில் ஏற்றிச் சென்ற னர்.
மாதர் சங்க தலைவர் கைது
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதர வாக ஞாயிறன்று தில்லி ஜந்தர் மந்தரில் மக ளிர் “மகா பஞ்சாயத்து” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பஞ்சாப்,ஹரியானா,சண்டிகர் ஆகிய பகுதி களைச் சேர்ந்த பெண்கள் தில்லி நோக்கி வந்த பொழுது ஒன்றிய மோடி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். முக்கிய மாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஹரியானா மாநில தலைவர் ஜக்மதி சங்க்வானை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது மாதர் சங்கத்தினரை உள்ளே அனுமதிக்கும்படி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆயினும் கைது செய்து காவல்துறை வாக னத்தில் ஏற்றினர்.
விவசாயிகள் தர்ணா
ஜந்தர் மந்தரில் வீராங்கனைகளின் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கிய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையிலான விவசாயிகள் தில்லி காவல்துறையினரால் காசியாபாத் எல்லையில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இதனால் தில்லி காசியா பாத் எல்லையில் ராகேஷ் திகாயத் தலை மையில் விவசாயிகள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். காசியாபாத் எல்லை யில் ராகேஷ் திகாயத் கூறியதாவது, “அனைத்து விவசாயிகளும் காவல்துறை யினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இனி அடுத்து என்ன செய்வது என்று யோசிப் போம்” என எனக் கூறினார்.