states

கள்ளச்சாராயத்திற்கு பத்து பேர் பலி

பாட்னா, (பீகார்), மார்ச் 20- பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் எட்டுப்பேர் பகல்பூர் மாவட்டம் சாஹிப்கஞ்ச், நாராயண்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். உடற்கூராய்விற்குப் பின்னர் தான் இறந்தவர்கள் ஹூச் சாப்பிட்டனரா என்பதை உறுதிப்படுத்த முடியு மென்கின்றனர் காவல்துறையினர். சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த  ஒருவர் கண்பார்வை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையில் டயர்களை எரித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.  முரளிகஞ்ச் பகுதி காவல் அதிகாரி ராஜ்கிஷோர்  மண்டல் கூறுகையில், சம்பவம் குறித்து காவல்துறை அறிந்து கொள்வதற்கு முன்பே இறந்தவரின் குடும்பத்தினர் உடல்களை தகனம் செய்ததால் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடிய வில்லை என்றார். கிட்டத்தட்ட ஏழு பேர் போலி மதுவை உட்கொண்டதால் பாதிக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.