states

img

நிலம் கையகப்படுத்தலை எதிர்த்ததற்காக அப்பாவி மக்களை சிறையில் அடைத்த தெலுங்கானா அரசு

காங்கிரஸ் ஆளும் தெலுங் கானா மாநிலத்தின் விகா ராபாத் மாவட்டத்திற்கு அருகே லகாச்செ ர்லா பகுதியில் உள்ள 12 கிராமங்களைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி “மருந்து கம் பெனி (pharma village)” அமைக்க திட்ட மிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விவசாய நிலங்களை கையகப்படுத்து வதற்கு லகாச்செர்லா பகுதியைச் சுற்றி யுள்ள 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இந்நிலையில், விகாராபாத் போலீ சார் எதிர்ப்பு தெரிவித்தவர்களை கொடூர மாக தாக்கி கைது செய்து சிறையில் அடை த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதில்,”நவம்பர் 11 அன்று மாவட்ட ஆட்சியரும், அதி காரிகளும் மருந்து கம்பெனி திட்டத்திற் காக 1,374 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவிக்க லகாச் செர்லாவிற்கு வருகை புரிந்தனர். இந்த வருகையின் பொழுது விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் நிலத்தை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.  ஆனால் அன்றைய தினம் மாலையே காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த வர்களை கைது செய்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூட விலக்கு அளிக்கப் படவில்லை. கிராமத்தை தனிமைப்படு த்தவும், உதவி கோருவதைத் தடுக்க வும் இணைய மற்றும் மின்சார சேவை களை துண்டித்துள்ளனர். தலித், பழங் குடியினர் வகுப்பினர் மிக மோசமாக துன் புறுத்தப்பட்டனர்” என புகாரில் கூறப் பட்டுள்ளது.  தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் ஆட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் தலை மையில் இடதுசாரி ஊழியர்கள் லகாச்செர்லா பகுதிக்குச் சென்று 12 கிராம மக்களிடம் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டங்களுக்கு உறு துணையாக இருப்போம் என உறுதி அளித்தனர்.