புதுதில்லி, அக்.29- தெலுங்கானாவில் தொகுதி உடன்பாடு தொடர்பாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், காங்கிரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தெலு ங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.