states

img

தேஜஸ்வியும் யாத்திரையை தொடங்கினார் பீகார் மக்கள் பிரம்மாண்ட ஆதரவு

நாட்டு மக்களை பிளவு படுத்தும் மோடி அரசின்  வகுப்புவாத அரசிய லுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த  தலைவரும், எம்பியுமான ராகுல்  காந்தி 2-ஆம் கட்டமாக “இந்திய  ஒற்றுமைக்கான நீதி யாத்திரை” என்ற பெயரில் கிழக்கு - மேற்கு  நோக்கி யாத்திரை சுற்றுப் பயணம்  மேற்கொண்டு வருகிறார்.  இந்த யாத்திரைக்கு செல்லும்  இடங்கள் எல்லாம் மக்கள் மத்தி யில் அமோக வரவேற்பு கிடைத்து  வரும் நிலையில், ராகுலின் யாத்  திரையைப் போன்று பீகாரிலும்  யாத்திரையை தொடங்கியுள்ளார் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி. பீகார் மாநிலத்தின் முக்கிய நகரான முசாபர்நகரில் தொடங்  கிய தேஜஸ்வியின் “ஜன் விஸ்  வாஸ் யாத்திரை” (பேருந்து பய ணம் - நடைபயணம்) மாநிலத்தின் 33 மாவட்டங்களுக்கும் செல்ல வுள்ள நிலையில், பெல்ஹரில்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்து டன் மார்ச் 1 அன்று நிறைவு பெறு கிறது.  கலக்கத்தில்  நிதிஷ் - பாஜக நிதிஷ் குமாரின் துரோகம்  மற்றும் பாஜகவின் இழிவான அர சியலை மக்களிடம் விளக்கவே தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா  தளம் யாத்திரையை தொடங்கி யுள்ளது. முதல் நாளே தேஜஸ்வி யின் யாத்திரைக்கு மக்கள் மத்தி யில் அமோக வரவேற்பு கிடைத் துள்ளதால் நிதிஷ் - பாஜக கலக்  கத்தில் உள்ளனர்.