states

img

தில்லி - நொய்டா பறக்கும் சாலையில் கட்டணம் வசூலிக்கக் கூடாது உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

தில்லி - நொய்டா பறக்கும் சாலை யில் (டிஎன்டி) கட்டணம் வசூலிப் பதை நிறுத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டு இருந் தது. இந்த உத்தர வை  எதிர்த்து நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி தனியார் டோல் கேட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங் கிய அமர்வு முன் விசாரணைக்குவந்தது.

நொய்டா நிர்வாகத்திற்கு கண்டனம்

இருதரப்பு வாதத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தில்லி - நொய்டா நேரடி பறக்கும் சாலையில் பயணிக்கும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தனி யார் நிறுவனமான நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி லிமிடெட்டுக்கு அனுமதி வழங் கியது நியாயமற்றது. குறிப்பாக நீதி க்குப் புறம்பானது, தன்னிச்சையானது. அந்த சாலையில் பயணிப்பவர்களிடம் கட்டணமோ, சுங்கக் கட்டணமோ தொடர்ந்து வசூலிப்பதற்கு காரணங்கள் ஏதுவும் இல்லை. அந்த ஒப்பந்தம் (சுங்கக் கட்டணம்) தவறானது என்று நாங்கள் கருதுகிறோம். எந்த முன் அனுபவமும் இல்லாத என்டிபிசிஎல் நிறுவனத்துக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை யை நொய்டா நிர்வாகம் கொடுத்து அநீதிக்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் நொய்டா நிர்வாகம் தனது அதி காரத்தை மீறியுள்ளது. மேலும், இது பொதுமக்கள் பல கோடி ரூபாய்களை இழக்க வழி வகுத்துள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.