ஹவுரா (மேற்குவங்கம்), பிப்.20- மேற்குவங்க மாநிலம் ஹவுரா வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி ஊழியரும் இந்திய மாணவர் சங்கத் தலைவருமான அனீஷ்கான் கொல்லப்பட்டார். அனீஷ்கான் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கொல்கத்தாவில் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். அனீஷ்கான் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு காவல்துறை சீருடை அணிந்த வர்கள் அம்தா நகரில் உள்ள அனீஷ்கா னின் வீட்டிற்குச் சென்று, அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று தாக்கி, அங்கிருந்து அவரை தூக்கி வீசியதாக அனீஷ் குடும்பத்தினர் கூறுகின்றனர். அனீஷ்கானின் தந்தை சலேம் கான் கூறுகையில், “நள்ளிரவு 12:30 மணியளவில் நான்கு பேர் எங்கள் வீட்டிற்கு வந்து தங்களை அம்தா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் என்று கூறினார்கள். அவர்களில் ஒருவர் என்னுடன் தரை தளத்தில் நின்றார். அவர் துப்பாக்கி ஏந்தியிருந்தார். மற்ற மூன்றுபேரும் என் மகனை மாடிக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து நான் ஒரு பெரிய சத்தத்தை கேட்டேன், என் மகன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக்கண் டேன். நான் சத்தம் போட்டதால் நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர்” என்றார்.
மேற்குவங்க மாநிலத்தில் சிஏஏ போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் அனீஷ்கான். அனீஷ் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளன. அனீஷ் படுகொலைக்கு திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் மூளையாக செயல் பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள னர். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் (சிஏஏ) மற்றும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருந்தபோது ஏழை களுக்கு உதவுவதில் முன்னணி வீரனாக இருந்துள்ளார் அனீஷ். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியும் கடும் கண்டனமும் தெரி வித்துள்ள இந்திய மாணவர் சங்கம், “அனீஷ் குடும்பத்திற்கும், அலியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கும் நாங்கள் துணை நிற்போம். மரணத்திற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் இன்று (திங்கள்) கண்டனப் பேரணி நடை பெறும்’’ என மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சுபாஜித் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் சங்க அகில இந்திய இணை செயலாளர் தீப்சிதா தர், மாநிலத் தலைவர் பிரதிகுர் ரஹ்மான் தலைமையில் மாணவர் சங்க பிரதிநிதிகள் அனீஷ்கானின் குடும்பத்தினரைச் சந்தித்து சம்ப வம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர். பின்னர் மாணவர் சங்க நிர்வாகி கள் கூறுகையில், ‘‘இந்தச் சம்பவம் தனிப் பட்ட முறையில் நடந்திருக்க வாய்ப்பில்லை. சில காலமாகவே அனீஷ் காலமாகவே குறி வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் திரிணாமுல் கட்சியின் உள்ளூர் தலை வர்கள் உடந்தையாக இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்’’ என்றனர். அனீஷ் மரணத்திற்கு நீதிகேட்டும். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மத்திய கொல்கத்தாவில் உள்ள எழுத்தாளர்கள் கட்டடத்திற்கு (ரைட்டர்ஸ் பில்டிங்) பேரணியாகச் செல்லவுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் இது “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை” என்று குற்றம் சாட்டினார். மேலும் குற்ற வாளிகளுக்கு எந்த அரசியல் கட்சியும் பாதுகாப்பு அளிக்கக்கூடாது என வலி யுறுத்தியுள்ளார். இந்திய மாணவர் சங்க த்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் மயூக்பிஸ்வாஸ் தனது ட்விட்டரில், “அனிஷ்கான். என் தோழன். நேற்று அவர் திரிணாமுல் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடியதற்காக அவரது வீட்டின் மூன்றா வது மாடியில் வைத்து தாக்கப்பட்டார், பின்னர் தூக்கி எறியப்பட்டார். குண்டர்கள் காவல்துறை சீருடையில் வந்துள்ளனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பிறகும் அவர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை’’ என பதிவிட்டுள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகளோ ‘‘காவலர்கள் யாரும் வீட்டிற்குச் செல்லவில்லை. அவர் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார் எனக் கூறினர்.