2010-ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லே ண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஜபி-களு க்காக ரூ. 3 ஆயிரத்து 600 கோடியில்12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அன்றைய மன்மோகன் சிங் அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் ரூ. 400 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆவணங்களில் குறிப்பி ட்டுள்ள ‘ளுழு’ என்பதற்கும் சோனியா காந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமலாக்கத்துறை தற்போது தெரி வித்துள்ளது.