வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் புதனன்று நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட் டது. இதனால் லேசன் பள்ளத்தாக்கில் உரு வாகும் டீஸ்டா நதியில் அபாய அளவை தாண்டிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகர் கோங்டாக், தெற்கு லோனார்க் ஏரி அருகே உள்ள பகுதிகள் வெள் ளத்தால் உருக்குலைந்தன. மேலும் கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெள்ளியன்று 26 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், சனியன்று டீஸ்டா நதி பாயும் மேற்கு வங்கத்தின் சிலிகுரி, ஜல்பை குரி, கூச் பெஹார் மாவட்டங்களில் இருந்து 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற் பட்டோர் காணாமல் போன நிலையில் அவர் களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.