400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என மோடி முழங்கியதே சரிவுக்கு காரணம்
பாஜகவிற்கு எதிராக கொதித்த ஏக்நாத் ஷிண்டே
“400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என மோடி முழங்கி யதே சரிவிற்கு காரணம்” என சிவசேனா தலைவரும், மகா ராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே கூறி பாஜகவிற்கு எதி ராக திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில்,”400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினர் முழங் கிய பின் நாட்டு மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை சந்தேகிக்கத் தொடங்கினர். மேலும் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப் படும், இடஒதுக்கீடு முறை இனி இருக்காது எனவும் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டதால் மக்கள் அச்சத்தில் உரைந்தனர். பிர தமர் நரேந்திர மோடி மீது மக்கள் சந்தேகம் கொள்ளத் தொடங்கி னர். இதனால் தான் மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பெரும்பாலான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கடும் சரிவை கண்டது” எனக் கூறினார். ஷிண்டேவின் இந்த பேச்சு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள்ளேயும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் கட்சி உடைக் கப்பட்டது- உடைக்கப்பட்ட பிரி வான ஷிண்டே - சிவசேனா, அஜித் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான பெயர் மற்றும் சின் னத்தை தேர்தல் ஆணையம் மூலம் பாஜக பெற்றுக் கொடுத்த நிலை யில், உண்மையான சிவசேனா (உத் தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சிக்கு வேறு பெயர்களும், சின் னங்களும் வழங்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் பலத்த அடி
கட்சியின் பெயர், சின்னம் நம்மி டம் இருப்பதால் மக்களவை தேர்த லில் பிரம்மாண்ட வெற்றி பெறலாம் என ஷிண்டே மற்றும் அஜித் பவார் கனவு கண்டனர். ஆனால் மகா ராஷ்டிரா மக்களோ இந்தியா கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் களின் கட்சிகள் உண்மையானது என சிவசேனா (உத்தவ்), தேசிய வாத காங்கிரஸ் (சரத்) ஆகிய கட்சி களுக்கு அமோக ஆதரவு அளித்து, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை (காங்கிரஸ் - 13, சிவசேனா (உத்தவ்) - 9, தேசியவாத காங்கிரஸ் (சரத்) - 8) இந்தியா கூட்டணிக்கு வழங்கி னர். பாஜக கூட்டணியோ வெறும் 18 தொகுதிகளை (பாஜக - 9, சிவ சேனா (ஷிண்டே) - 7, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - 1) மட்டுமே கைப்பற்றியது. இதன் பிறகு மகாராஷ்டிராவின் பாஜக கூட்டணிக்குள் இன்று வரை குழப்பம் நீடித்து வருகிறது. கட்சியை உடைத்தும், ஆட்சியில் பதவி கொடுத்தும் மக்களவை தேர் தலில் ஏன் குறிப்பிட்ட இடங்களை வெல்லவில்லை? என ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னா விஸிடம் பாஜக மேலிடம் கேள்வி கணைகளை தொடுத்ததாக தக வல் வெளியாகியது. இதனால் மூவ ருமே கடும் அதிருப்தியில் இருப்ப தாகவும், இதில் பட்னாவிஸ் எந்த நேரத்திலும் துணை முதல்வர் பத வியை ராஜினாமா செய்யலாம் என வும் தகவல்கள் வெளியாகியது. ஒன்றிய அமைச்சரவையில் கேபி னட் இடம் கொடுக்கப்படாததால் சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சியின் கொற டாக்கள் பாஜகவிற்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தின.
உடைகிறது ஷிண்டே அணி?
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா ஷிண்டே அணி யைச் சேர்ந்த எம்பிக்கள், சிவசேனா உத்தவ் அணியினருடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், விரை வில் உத்தவ் அணியில் இணைய வுள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. இதனை “தி இந்து”, “இந் தியா டுடே” உள்ளிட்ட ஆங்கில ஊட கங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், திங்களன்று சிவசேனா உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,”மக்களவை தேர்த லில் வெற்றி பெற்ற 7 சிவசேனா ஷிண்டே எம்பிக்களும் எங்களுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். கொறாடா பிரச்சனை வரும் என்ப தால் தற்போது அறிவிப்பு எதுவும் வெளியிட மாட்டோம்” எனக் கூறி னார். சஞ்சய் ராவத்தின் பேச்சு மற் றும் ஆங்கில ஊடகங்களின் செய்தி கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கூட்டணி கட்சிகளை நம்பியே மோடி பிரதமர் நாற்காலி யில் அமர்ந்துள்ளார். தற்பொழுது ஷிண்டே எம்பிக்கள் (7) வெளியேறி னால் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் பலம் (தற்போது 293) 286 குறையும், நாளடைவில் வேறு கட்சிகளில் இதுபோன்ற சம்பவங் கள் அரங்கேறினால் தங்களது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால் பாஜக பதற்றத்தில் உள்ளது.