states

img

வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர்கள் தேர்வு

புதுதில்லி, நவ.6 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க த்தின் அகில இந்திய துணைத் தலைவ ராக, சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செய லாளரான ஏ.வி.சிங்காரவேலன் தேர்வு  செய்யப்பட்டார். அவர் உள்ளிட்ட 6 பேர், சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர். நவம்பர் 3 அன்று புதுதில்லியில், வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தை யொட்டி, எங்கே எனது வேலை என்ற முழக்கத்துடன் வேலையின்மைக்கு எதிரான மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோடி அரசின் இளைஞர் விரோத கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டத்தை சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு, வாலிபர் சங்க அகில இந்தியத் தலை வர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., பொதுச் செயலா ளர் ஹிமக்ன ராஜ் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.  இதைத் தொடர்ந்து சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழுவிற்கு தமிழகத்திலிருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அகில  இந்தியத் துணைத் தலைவராக ஏ.வி. சிங்காரவேலன், மத்தியக்குழு உறுப்பி னர்களாக எஸ்.கார்த்திக், எஸ்.பாரதி, மணிகண்டன், செல்வராஜ், பிரியங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.