states

img

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்

சென்னை, மே 17 - அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்தால் பாஜகவை வீழ்த்துவதோடு தற்போதுள்ள இந்தியாவை விட சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரத்தில்  செவ்வாயன்று (மே 16) நடை பெற்ற பட்டியலின, பழங்குடி மக்கள் உரிமை மீட்பு  மாநாட்டில் அவர் பேசியது வருமாறு, இன்றைய காலகட்டத்தில் இந்த மாநாடு மிக முக்கியமான மாநாடாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப்போராட்டத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியா வில் வர்க்கப்போராட்டம் என்பது  அதன் இலக்கை எட்டவேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம்.  ஒவ்வொரு மனிதருக்கும்  இரண்டு  கால்கள் இருந்தாலும் அவை இரண்டும் ஒரு சேர இயங்கினால்தான் அவர் ஆரோக்கிய மான மனிதராக இருக்கமுடியும். அதுபோல  ஒரு அரசியல் இயக்கம் என்பது பொருளா தாரச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதோடு நின்று விடாமல்  சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வும் போராட வேண்டும். இந்த இரண்டும் ஒருசேர  நடைபெற்றால் தான் அனைத்து தடைகளில் இருந்தும் மனிதகுலத்தை விடுவிக்க முடியும்.  இதுதான் மார்க்சியத்தின் இறுதி லட்சியமும் ஆகும். விடுதலையின்  தத்துவமும் அதுவே யாகும்.  மார்க்சியத்திற்கென்றே தனித்துவ மான அடையாளம் மட்டுமல்ல, நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நோக்கமும் அதுவேயாகும். 

அம்பேத்கர், மார்க்ஸ் கூறியது என்ன?

அரசியல் நிர்ணயசபையில் அரசியல் சாசனத்தின் வரைவை தாக்கல் செய்து பேசிய போது டாக்டர் அம்பேத்கர், ஒரு எச்சரிக்கையை விடுத்தார். அது என்னவென்றால் நாம் அரசியல்  சாசனத்தில் ஏற்படுத்தக்கூடிய அரசியல்  கட்ட மைப்பு என்பது ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற உரிமையோடு இருக்க வேண்டும், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு  என்பது  சமூக ஒடுக்குமுறை யில் இருந்தும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும் மக்களை விடுவிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.  இந்தியர்கள் அனைவரும் சாதியின் பெயரால் அல்லது மதத்தின் பெயரால் அடையாளம் காண்பதை விட அனைவரும் மனிதர்கள் என்ற நிலையில்தான் அடையாளம் காணவேண்டும் என்றும் அப்போதுதான் இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்றும் காரல் மார்க்ஸ் கூறினார். அதுதான் உண்மை யான சமூக நீதியாக இருக்கமுடியும். அத்தகைய நிலையை நோக்கித்தான் இந்தியாவை அழைத்துச் செல்லவேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக தற்போது நாட்டில்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நாட்டை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள், மநு ஸ்மிருதியை அடிப்படை யாக  கொண்டு நடத்தப்பட்ட  மோசமான கால கட்டத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்கிறார்கள். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

இருண்டகாலத்தை நோக்கி....

பெண்களை மதிக்காத,  அவர்களுக்கு எந்த  வித உரிமையையும் அளிக்காத, தலித் மக்க ளை அடக்கி ஒடுக்கக்கூடிய,  சாதியப்  பாகுபாடு கள் நிறைந்த, மதங்களை கடந்த சாதிகளை கடந்த திருமணங்களை அனுமதிக்காத மிக மோசமான நிலை கடந்த, காலத்தில் இருந்தது. அத்தகைய நிலையை நோக்கி நாட்டை அழைத்து ச்செல்ல தற்போதைய  ஆட்சி யாளர்களும் இந்துத்துவா சக்திகளும் முயற்சிக்கின்றன.   இத்தகைய பிற்போக்குத்தனமான முயற்சியை நாம் போராடி தடுத்து நிறுத்த வேண்டியது இன்றைய காலத்தில் மிக அவசியமாகும்.  இந்தியாவை பாதுகாத்து  இதைவிட சிறந்ததொரு இந்தியாவை வருங்காலத்தில் உருவாக்க நாம் அனைவரும் போராட வேண்டியுள்ளது.  சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப்  போராடுவது என்பது சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, நமது அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதியை பாதுகாக்கவும் அதை மேலும் வலுப்படுத்தவும்  நடத்தும் போராட்டமுமாகும்.   அரசமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் பாசிச ஆட்சியாளர்கள் செயல்படுவதை தடுத்து  நிறுத்துவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இந்துத்துவா சக்திகளுக்கும் அதன் பாசிசத் திட்டங்களுக்கும் எதிராக நடத்தப் படும் போராட்டம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நடத்தப்படும் போராட்டம் மட்டுமல்ல,  ஜனநாயகத்தையும்,  நாட்டின் பொருளாதார வளங்களை ஆட்சியாளர்கள் ஆதரவோடு பெருநிறுவனங்கள் கொள்ளை யடிப்பதை தடுத்து நிறுத்தக்கூடிய போராட்டமும் ஆகும்.

மதவாத சக்திகளை தனிமைப்படுத்துவோம்

சென்னையில் செவ்வாயன்று (மே 16) காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். இந்தியாவை பாதுகாக்க நாட்டில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகளை மேலும் வலுப்படுத்த கூட்டாக பணி யாற்றுவது  குறித்து விவாதித்தோம். இத்தகைய மதவாத சக்திகள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்கவும் சமூக நீதியை நிலை நாட்டவும் உதவும். எனவே இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அவசிய மான ஒன்றாகும்.

வரலாறு படைத்த  கர்நாடக மக்கள் 

தமிழ்நாட்டின் அண்டை மாநில மான கர்நாடகாவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து போராடி னார்கள். இதில்மிக முக்கியமானது அரசியல் கட்சிகள் ஒன்று சேருவது மட்டுல்ல;  மக்கள் ஒன்றுபட்டால் புதிய  வரலாற்றை படைக்கமுடியும் என்பதை யும் மதவாத சக்திகளை வீழ்த்தமுடியும் என்பதையும் கர்நாடகா மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அத்தகைய ஒரு நம்பிக்கையை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் நாம் விதைக்க வேண்டும்.

உண்மையான சமூக நீதி

நாட்டில் சமூக நீதிக்காக நாராயண குரு, மகாத்மா பூலே, சாகுமகராஜ், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் என  ஏராளமான தலைவர்கள் போராடி னார்கள். இவர்கள் மட்டுமல்ல மேலும் பல தலைவர்கள் சமூக நீதிக்காக கோடிக்கணக்கான மக்களை திரட்டி யிருக்கிறார்கள். இருந்தாலும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த பின்னரும் அனைவருக்கும் சமூக நீதி உறுதிப்படுத்தப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண்கள் மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே ஒடுக்கப் பட்ட மக்களை, பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுவித்து அவர் களுக்கு பொருளாதார அதிகாரத்தை அளிக்கும் போதுதான் உண்மையான சமூக நீதியை அடையமுடியும். 

ஒடுக்கப்படும் தலித் மக்கள் 

வடஇந்தியாவில் உள்ள 90 விழுக்காடு நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் . இவர்கள் பொருளாதார  ரீதியாக அதிகாரத்தை பெற வேண்டும். காந்தியடிகள் போல்  இவர்களது பெயரை அரிஜன் என்று பெயர்  மாற்றினால் மட்டும் போதாது. கல்வி, சமூக ரீதியாகவும்  இம் மக்கள் முன்னேற வேண்டும். அந்த  சமூகத்தில் இருந்து  கல்வியாளர்கள் உருவாக வேண்டும் என்றால் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதற்கு அவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்திற்கு சென்றதால் தான் ஒரு சட்ட வல்லுநராக உருவாக முடிந்தது. ஆனால் இன்றோ தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்  வாய்ப்பை இன்றைய  ஆட்சியாளர்கள் தட்டிப் பறித்துள்ளனர். தலித் மாணவர் களுக்கான கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் மாண வர்களுக்கான கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆட்சி யாளர்களின் இத்தகைய நட வடிக்கை இந்தியாவை பின்னோக்கி  அழைத்துச்செல்கிற நடவடிக்கை யாகும். இது உடனடியாக தடுத்து  நிறுத்தப்படவேண்டியது அவசிய மாகும். 

பாஜகவின் உண்மையான நோக்கமென்ன?

நாட்டில் தற்போது  என்ன நடந்துகொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஒரே நோக்கம் இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றுவதுதான்.  இந்து மதத்திற்கு எதிராகத்தான் அம்பேத்கர் கலகம் செய்து பௌத்த மதத்தைத் தழு வினார். இந்து மறுமலர்ச்சி என்பது வேறு ஒன்றும் அல்ல, சமூக அநீதி யை,  சமூக ஒடுக்குமுறையை  சட்டப் பூர்வமாக்குவதுதான். எனவேதான் அதை  மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் பேசி வருகின்றன. அதன் நோக்கம் என்ன வென்றால் மநு ஸ்மிருதி காலத்தை நோக்கி இந்தியாவை கொண்டு செல்வதுதான். நால்வருண அடிப்ப டையில் சமூகத்தை பிரிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இத்தகைய இந்து மறுமலர்ச்சி என்பது, நாம் சமூக நீதியை அடைவதற்கு நடத்தப்படும் போராட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

இந்து மறுமலர்ச்சியின் பின்னணி என்ன?

இந்து மறுமலர்ச்சி என்பது மீண்டும் உருவாகுதல் என்பதாகும். அதன் அர்த்தம் என்னவென்றால் சாதிய ஒடுக்குமுறை தொடரவேண்டும் என்பதுதான். இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்கள் குறிவைத்து தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆணவக்கொலைகள் அதி கரித்துள்ளன. வடஇந்தியாவில் காப்  பஞ்சாயத்துகள் தீவிரமாக நடைபெறு கின்றன. வாலிபர்கள் காதல் திருமணம் அல்லது சாதி மாறி திரு மணம்  செய்தால் அவர்களுக்கு காப்  பஞ்சாயத்துக்களில் தண்டனை விதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடை பெறுகின்றன. சட்டத்தால் தடை செய்யப்பட்ட போதிலும் மனித மலத்தை கையால் அள்ளுவது நிறுத்தப் படவில்லை. இந்து மறுமலர்ச்சி என்ற பெயரில் மநுஸ்மிருதி காலத்திற்கு நாட்டை அழைத்துச்செல்லும் முயற்சி கள் அனைத்தும் மக்களை மேலும்  சாதிய ரீதியாக ஒடுக்கவும் சாதி ரீதி யாக பாகுபாடுகளை அதிகரிக்கவுமே உதவும்.

சமூகநீதியை உயர்த்திப்பிடிப்போம்

எனவே நாட்டை பின்னோக்கி  அழைத்துச் செல்லும்  ஆட்சியாளர் களின் பிற்போக்குத்தனமான மற்றும் பாசிச எண்ணம் கொண்ட.  கருத்துக்களை புறந்தள்ளி சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கவேண்டும் அதன் மூலமே சமூகத்தில் சமத்து வத்தை ஏற்படுத்தமுடியும் என்ற  கருத்து சமூகத்தில் மேலோங்கி வருவது ஆரோக்கியமான ஒன்றாகும். குறிப் பாக தமிழ்நாட்டு மக்களிடம்   இந்தக் கருத்து வலுவாக விதைக்கப் பட்டுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் வலுப்படுத்தப்படவேண்டும், மாநிலத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து  இந்தியாவை பாதுகாத்து இதைவிட சிறந்ததொரு இந்தியாவை எங்களால் உருவாக்கிக்காட்டமுடியும் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். எனவே வருங்காலத்திலும் இந்தத் திசையில் தமிழ்நாட்டில்  உள்ள மதச்சார்பற்ற சக்திகள் செயல்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  இவ்வாறு யெச்சூரிபேசினார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார்.