states

img

தமிழ்நாடு பெயர் வைக்க தன்னை ஈந்த தியாகி

பழம்பெரும் தேசபக்தர் கா.பெ.சங்கர லிங்கனார் சென்னை மாகாணத்திற்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும். அரசி யல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவ தும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கை களுடன், 1956 ஜூலை 27ஆம் தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.  அவரது முக்கியக் கோரிக்கையான தமிழ்நாடு கோரிக்கையை ஏற்று உயிரைக் காப்பாற்ற கம்யூனிஸ்ட் கட்சியும் இதர கட்சிகளும் முதல்வர் காமராசரைக் கேட்டுக்கொண்டன. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.  அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணா விரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம் பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம், அண்ணா, காமராசர், ஜீவானந்தம் உட்பட பல தலைவர் கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர், இருந்தும் உண்ணாவிர தம் நிறுத்தப்படவில்லை. நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. 

அக்டோபர் 10ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் நாள் அன்று அவருடைய உயிர் பிரிந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.  தான் இறந்தபின் தன் உடலைக் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் ஒப்படைத்து, இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறி யிருந்தார் சங்கரலிங்கனார். அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்ற வர்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.டி.கே.தங்கமணியும், கே. பி. ஜானகியம்மா வும்.  மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் சங்கர லிங்கனார் உடல் தகனம் செய்யப்பட்டது. 

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டும் கோரிக்கைக்கு அவருடைய மறை வுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன் வைத்தன. ஏற்கனவே அவருக்கு உதவியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவர் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ் நாடு என மாற்ற வேண்டும் என ஒரு மசோதாவை கொண்டு வந்தார். அப்போது தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் கொண்டு வந்தால் பரிசீலிக்கப்படும் என்று உள்துறை இணையமைச்சர் கூறி தீர்மா னம்  தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து 1964 ஜனவரியில் சென்னை மாநில சட்ட மன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மா னம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னாளில் 1967-ல் ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில், 1968 ஜூலை 18இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் 1968ஆம் ஆண்டு நவம்பர் 23 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா  நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதை யடுத்து 1968ஆம் ஆண்டு டிசம்பர் 1இல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டா டப்பட்டபோது “சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்” தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தியாகத்தின் பின்னணியில் பெற்ற மொழியுரிமையைக் காலில் போட்டு மிதிக்கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் ஒரே மொழி ஒரே நாடு எனும் மக்கள் விரோதக் கொள்கையை முறியடிக்க வேண்டியது அனை வரின் அவசியக் கடமை.

...பெரணமல்லூர் சேகரன்