states

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி நிதி விடுவிப்பு

புதுதில்லி,பிப்.25-  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதி அமைச்சகம்  ரூ.267 கோடி நிதியை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தால் ஒன்றிய அரசு உள் ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை நிறுத்தி வைத்திருந்தது. தொடர்ந்து பல வருடங்களாக நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடக்க வில்லை என்றும் குறிப்பிட்டு தமிழக அரசு  அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக் கை வைத்திருந்தது. இந்த நிலை யில், தற்போது தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதை யடுத்து, ஒன்றிய அரசு நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.267 கோடியை விடுவித்துள்ளது.   இந்த நிதி நகர்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு களுக்கு, இந்த தொகையில் 50  சதவீதம் குடிதண்ணீருக்காக பயன்படுத்த வேண்டும் என்றும், 50 சதவீதம் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு பயன் படுத்த வேண்டுமென்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த நிலை யில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.