ராய்ப்பூர்,அக்.7- சத்தீஸ்கரில் தசரா கொண்டா ட்டத்தின்போது ராவணனின் உருவ பொம்மை சரியாக எரியாத தால் மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் புதன்கிழமை தசரா விழா கொண்டாடப்பட்டது. ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்வும் இரவில் நடை பெற்றது. இந்த நிலையில், அங்கு ராவணனின் உருவபொம்மை யை ஏற்பாடு செய்யும் பணி யை நகராட்சி நிர்வாகம் கவ னித்திருக்கிறது. ஆனால், ராவண வதத்தின்போது ராவணனின் பத்து தலைகள் சரியாக எரியவில்லையாம். இதனால், இந்த நிகழ்வுக்கு பொறுப்பா ளராக நியமிக்கப்பட்ட மாநகராட்சி எழுத்தரான ராஜேந்திர யாதவ் என்பவரை மாநகராட்சி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.