புதுதில்லி, ஜன.1- 2021-22ஆம் ஆண்டில், கார்ப்பரேட் முதலாளிகள் பாஜக வுக்கு ரூ. 351 கோடியை நன்கொடையாக அள்ளித் தந்துள்ளனர். அதேநேரத்தில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கி ரசுக்கு ரூ. 18 கோடியே 44 லட்சம் மட்டும் நன்கொடை கிடைத்துள் ளது. இது பாஜக பெற்றதைக் காட்டிலும் 19 மடங்கு குறைவாகும். 2021-22 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ((Association for Democratic Reforms -ADR) வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு, 89 கார்ப்பரேட், வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ. 487.0551 கோடியை 6 தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக நன்கொடையாக அளித்துள்ளனர். இதில், பாஜக-வுக்கு மட்டும் ரூ. 351 கோடி 50 லட்சத்தை அள்ளித்தந்துள்ளனர். பாஜகவுக்கு கிடைத்திருக்கும் இந்த நன்கொடையானது, ஒட்டுமொத்த கார்ப்பரேட் நன்கொடையில் 72.17 சதவிகிதம் ஆகும். இதற்கு அடுத்து, கே. சந்திரசேகரராவின் ‘பாரத் ராஷ்டிர சமிதி’ (BRS) கட்சிக்கு ரூ. 40 கோடி கிடைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்க ளில், சமாஜ்வாதி ரூ. 27 கோடி, ஆம் ஆத்மி ரூ. 21 கோடியே 12 லட்சம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ. 20 கோடி என நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதேநேரத்தில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கி ரசுக்கு ரூ. 18 கோடியே 44 லட்சம் மட்டுமே நன்கொடையாகக் கிடைத் துள்ளது. சிரோமணி அகாலி தளம் ரூ. 7 கோடி, பஞ்சாப் லோக் காங்கி ரஸ் ரூ.1 கோடி, கோவா பார்வர்டு கட்சி, திமுக தலா ரூ. 50 லட்சம் என கார்ப்பரேட் நன்கொடைகளைப் பெற்றுள்ளன.