புதுதில்லி, மார்ச் 25- கேரளாவின் சில்வர் லைன் ரயில் திட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சகம் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், மாறாக, ரயில்வே அமைச்சகம் சமூக தாக்க ஆய்வைக்கூட தடுக்க முயல்கிறது என்றும் இத்துறைகளின் இரட்டை நிலைப்பாட்டை ரயில்வேயின் நிதிக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஜான் பிரிட்டாஸ் அம்பலப்படுத்தி னார். இதுகுறித்து மாநிலங்களவை யில் அவர் மேலும் பேசியதாவது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேரள முதல்வருக்கு எழுதிய கடி தத்தில், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், கடனுக்காக ஜிகா (ஜப்பான் இன்டர் நேசனல் கார்ப்பரேசன் ஏஜென்சி) வைத் தொடர்புகொள்ளவும் தெரிவித் தார். இதற்கிடையில் ஜிகா உடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு திட்ட தொகுப்பை இறுதி செய்யவும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர அனுமதிகளை துரிதப்படுத்தவும் நிதியமைச்சகம் கேரள அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
மாறாக, ரயில்வே அமைச்சகம் சமூக தாக்க ஆய்வைக்கூட தடுக்க முயல்கிறது. இதற்கு கேரளாவில் காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சி கள் கூட்டுச் சேர்ந்துள்ளன. ஒன்றிய அமைச்சரவையின் முடிவின்படி சில்வர்லைன் திட்டம் ஒன்றிய-மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாகும். பேச்சுவார்த்தை மூலம் முடிவெடுப்பதற்குப் பதி லாக, இரட்டை வேடம் போடுவது என்ற கீழ்த்தரமான அரசியல் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது. ரயில் வளர்ச்சியில் கேரளாவை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக் கணித்து வருகிறது. இதற்கு நேமம் முனையம் உதாரணமாகும். 2008இல் அறிவிக்கப்பட்ட ரூ.120 கோடி திட்டத்திற்கான முதன்மைத் தொகைக்குக் கூட ரயில்வேயால் ஒப்புதல் அளிக்க முடியவில்லை என்று பிரிட்டாஸ் கூறினார். ரயில்வே வளர்ச்சியில் கேரளா வை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக நாடாளுமன்றத்தில் சிபிஐ உறுப்பி னர் பினோய் விஸ்வமும் குற்றம் சாட்டினார். ரயில்வே மண்டலம் மற்றும் கஞ்சிக்கோட்டில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற கேரளத்தின் தேவைகள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று பினோய் விஸ்வம் கூறினார்.