states

img

அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ரயில்வேயில் 35 ஆயிரம் பேருக்கு வேலை ரயில்வே அதிகாரி தகவல்

புதுதில்லி, நவ.19 - ரயில்வேயில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிநியமன ஆணை வழங்கப்படும் என இந்திய ரயில்வேயின் செயல் இயக்குநர் (தகவல் மற்றும் விளம்பரம்) அமிதாப் ஷர்மா தெரிவித்தார்.   இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள  35,281  காலியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு செயல்முறை வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும், இந்த நியமனங்கள் அனைத்தும் சிஇஎன் (மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு) 2019- இன் அடிப்படையில் நடைபெறும் என்று அமிதாப் ஷர்மா கூறினார். ஒரே நேரத்தில் அனைத்து நிலைகளிலான தேர்வு முடிவுகளை வெளியிடாதது குறித்து கேள்விக்கு, ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகுதி பெறுகின்றனர். இதனால் தகுதியுடைய பலர்  வேலைவாய்ப்பை இழக்கின்றனர். எனவே அனைத்து நிலைகளின் தேர்வுகளின் முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை.ரயில்வேயின் அனைத்து நிலைகளின் தேர்வு முடிவுகளை தனித்தனியாகப் பெற ரயில்வே தயாராகி வருகிறது, இதனால் அதிகமானோர்  வேலை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என்று ஷர்மா கூறினார்.