states

img

தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்

தனியார் கல்வி நிறுவனங்களில்  இட ஒதுக்கீட்டை  பின்பற்ற வேண்டும்  ராகுல் காந்தி வலியுறுத்தல்

தனியார் கல்வி நிறுவனங்களில்  இட ஒதுக்கீட்டை  பின்பற்ற வேண்டும்  ராகுல் காந்தி வலியுறுத்தல் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50 சதவீதம் இட ஒதுக்கீடு உச்சவரம்பு எனும் தடையை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பீகார் மாநிலத்தில் அம்பேத்கர் மாண வர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி இதனை வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அவர் அவ்விடுதிக்கு செல்ல முயன்ற போது  காவல்துறை அவரை செல்ல விடாமல் தடுத்தது. பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், கல்விக்காக அர சாங்கம் பணத்தை செலவிட வேண்டும். 50 சதவீத இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பு எனும் தடையை உடைக்க வேண்டும். தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட வேண்டும். நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 24 மணி நேரமும் அநீதியை எதிர்கொள்கின்றனர். பாகு பாடு காட்டப்பட்டு கல்வி பெறுவதில் இருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். எனவேதான் சாதிவாரி கணக்கெ டுப்பு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.   ஆனால், நரேந்திர மோடியும், பீகார்  அரசாங்கமும் இந்தச் சட்டத்தை அமல் படுத்தவில்லை. எனவே நாங்கள் அவர்க ளுக்கு அழுத்தம் கொடுத்து அதைச் செய்ய வைப்போம். தனியார் கல்வி நிறு வனங்களில் இடஒதுக்கீட்டை அமல் படுத்தாவிட்டால், அடுத்த கட்ட போ ராட்டத்துக்கு நாங்கள் தயாராவோம். தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு நீட்டிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என அவர் கூறியுள்ளார்.