புதுதில்லி, ஜூலை 18- அவதூறு வழக்கு தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யின் மேல்முறையீட்டு மனுவை வெள்ளியன்று (ஜூலை 21) விசார ணைக்கு எடுக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2019இல் காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி “மோடி குடும்ப பெயர்” குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்ட னை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடி னார். குஜராத் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நிலையில், குஜராத் நீதிமன்றத் தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு அவசர வழக்காக செவ்வாயன்று விசாரணை க்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் இந்த வழக்கை உடனடியாக விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டது. தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு வருகிற ஜூலை 21 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை பதிவு செய்த குஜராத் எம்எல்ஏ பூர்னேஷ் மோடி ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.