புதுதில்லி, மே 16 - பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானிக்கும் உள்ள நெருக்கம் உலகறிந்தது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உலகின் முதல் 100 பணக்காரர்களில் ஒருவராக கூட அதானி இல்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் உலகின் 5-ஆவது பெரும்பணக்காரராக அதானி உருவெடுத்துள்ளார். இந்தியாவிலும் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். சுரங்கம், மின்சாரம், எரிவாயு, விமான நிலையங்கள், துறைமுகம், வேளாண் வர்த்தகம், சொகுசுக் கப்பல்கள் இயக்கம், வெடி மருந்து, சிறியரகத் துப்பாக்கித் தயாரிப்புத் தொழிற்சாலை என்று அனைத்து தொழில்களை யும் ஏகபோகமாக கைப்பற்றும் முயற்சியில் வெறித்தனமாக இறங்கியுள்ளார். அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் (Fast-Moving Consumer Goods - FMCG) எனப்படும் பலசரக்கு பிரிவையும் விடாத அவர், ‘அதானி வில்மர்’ (Adani Wilmar Limited) என்ற பெயரில் அந்த துறையிலும் கடைவிரித்துள் ளார். ‘அதானி வில்மர்’ நிறுவனம் ‘பார்சூன்’ என்ற பிராண்டட் பெயரில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், கடலை மாவு, சர்க்கரை, பட்டாணி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவின் ஒட்டு மொத்த அரிசி வர்த்தகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் வகையில், மாநில அளவிலான அரிசி பிராண்டுகளையும், ரைஸ் மில்களையும் தற்போது ஒவ்வொன்றாக விலை பேசி வரு கிறார். இந்த மாதத்தின் துவக்கத்தில், பிரபல பாசு மதி அரிசி விற்பனை நிறுவனமான கோஹி னூரை அவர் விலைக்கு வாங்கினார். அந்த வரிசையிலேயே தற்போது, இந்தியா வின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களான ‘ஏசிசி சிமெண்ட்’ மற்றும் ‘அம்புஜா சிமெண்ட்’ ஆகியவற்றை தற்போது விலைக்கு வாங்கி யுள்ளார். சுவிஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹோல்சிம் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த இரண்டு நிறுவனங்களையும் 10.5 பில்லியன் டாலருக்கு அதானி கைப்பற்றி யுள்ளார். ஜிண்டால், அல்ட்ராடெக் போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டிக்கு வந்த நிலையில், அந்த நிறுவனங்களை சாமர்த்திய மாக ஓரங்கட்டியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ‘அதானி சிமெண்ட்’ என்ற பெயரில் சிமெண்ட் தயாரிப்பில் அதானி கால் பதித்தார். ஆண்டொன்றுக்கு 66 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஏசிசி, அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை வளைத்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் 2-ஆவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக அதானி மாறியுள்ளார். இந்த வர்த்தகம் பற்றி, “இந்தியாவின் வளர்ச்சியில் நமது நம்பிக்கை அசைக்க முடியாதது. இன்று ஹோல்சிம் இந்திய வர்த்த கத்தைக் கைப்பற்றியுள்ளோம்” என்றும் மகிழ்ச்சி பொங்க அதானி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
குயிண்டிலியன் பிசினஸ் மீடியா லிமிடெட்
அதானி குழுமம் இரண்டு சிமெண்ட் நிறு வனங்கள் விலைக்கு வாங்கிய செய்திகளுக்கு ஊடாகவே, அதானி குழுமத்தின் மீடியா பிரிவான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் (AMG Media Networks Limited), குயிண்டி லியன் பிசினஸ் மீடியா லிமிடெட் (Quintillion Business Media Limited - QBML) நிறுவனத்தின் 49 சதவிகித பங்கு களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. குயிண்டிலியன் பிசினஸ் மீடியாவின் (QBML) பங்கு களை வாங்குவதன் மூலம் மீடியா வணிகத்தி லும் தாங்கள் நுழைவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. குயிண்டிலியன் பிசினஸ் மீடியா லிமிடெட் என்பது ஒரு பிரத்யேக வணிக மற்றும் நிதிச் செய்தி டிஜிட்டல் மீடியா தளத்தை சொந்த மாக கொண்டு இயக்குவதாகும். இது ‘www.bqprime.com’ (முன்னர் www.bloombergquint.com) என அறியப்பட்ட மீடியா நிறுவனமாகும்.