states

பிரதமர் மோடி அடுத்த மாதம் வெளிநாடு பயணம்

புதுதில்லி,ஏப்.27-   ஜி 7 மற்றும் குவாட் மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. மே 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி  வரை ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது. பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட தலை வர்களுடன் பிரதமர்  மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி புதிய  தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசு வார் என்று கூறப்படுகிறது.