யுஏபிஏ சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நியூஸ்கிளிக் செய்தி நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா அவர்கள் எழுதிய புத்தகத்தை, நியூஸ்கிளிக் ஊடக குழுவினர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்கினர். மோடி அரசாங்கத்தால் இடதுசாரி அறிவுஜீவிகளை வேட்டையாடுவதற்கு எதிராக பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அவரது சகாக்களுக்கு நாங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கிறோம் என பினராயி விஜயன் கூறினார்.