தில்லி சேவைகள் சட்ட மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு களுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் 3 அன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. தற்போது மாநிலங்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டு உள்ளதால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டம் மூலம் அதிகாரி களின் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய ‘தேசிய தலைநகர் சிவில் சேவை ஆணையம்’ உருவாக்கப்பட உள்ளது. இதில் முதல்வர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உறுப் பினர்களாக இருப்பார்கள். ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். முதல்வர் உள்ளிட்ட இந்த ஆணையத்தின் பெரும் பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு கள் துணை நிலை ஆளுநருக்கு பரிந்து ரைகளாக அனுப்பப்படும். எனினும், அவற்றை நிராகரிக்கவோ, மறுபரி சீலனைக்கு அனுப்பவோ துணை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது. அதேபோல, தனது சொந்த விருப்பத் தின் பேரில் தில்லி சட்டப்பேரவையை கூட்டவும், சட்டப்பேரவை நாட்களை நீடிக்கவும் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருக்கும். அரசின் நிர்வாக த்தில் குறைகள் இருப்பின், அதனை சம் பந்தப்பட்ட அமைச்சரிடம் தெரிவிக்கா மல், அதிகாரிகள் நேரடியாகவே துணை நிலை ஆளுநரிடம் கொண்டுசெல்லலாம். தில்லி சட்டப்பேரவைக்கு அதிகாரிகள், வாரியங்கள், ஆணையங்கள், சட்டப் பூர்வ அமைப்புகளை அமைக்கும் அதி காரங்களும் ஆளுநரிடமே இருக்கும்.