புதுதில்லி, மார்ச்.1- சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மானிய விலை (பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா) சிலிண்டர் திட்டத்தில் 9.6 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மானிய விலை சிலிண்டர் திட்டத் தில் 9% க்கும் அதிகமானோர் மறு சிலிண்டர்களை எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், மேலும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டி ருப்பது மோடி அரசின் குரூரமான தாக்குதல் என்று கூறியுள்ளார். மோடி அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ் வாலா யோஜனா என்ற பெயரில் மானிய விலை சிலிண்டர் திட்டம் ஒன்றை துவங்கியது. கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 9.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த திட்டத் தில் பயனாளிகளுக்கு ஒவ் வொரு சிலிண்டருக்கும் (14.2 கிலோ) மானியத் தொகையாக ரூ. 200, அதாவது ஆண்டுக்கு ரூ. 1,600 வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. சிலிண்டர் விலை ரூ.1000-த்தை தாண்டிய பிறகு ஒவ்வொரு சிலிண்டருக்கு ரூ. 20 முதல் 30 வரை மட்டுமே மானி யத் தொகை வழங்கப்பட்டது. இந் நிலையில், ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் நடப் பாண்டு பட்ஜெட் தாக்கலின் பொழுது 2021-22 காலகட்டத்தில் மானிய விலை சிலிண்டர் திட்டத் தின் கீழ் பயனாளிகளுக்கு 9.6 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட் டுள்ளது என பெருமையடித்துக் கொண்டார்.
வெறும் 4 சிலிண்டர்
குடும்பத்திற்கு ஆண்டுக்கு குறைந்தது 6 அல்லது 7 சிலிண் டர்கள் தேவைப்படும் நிலையில், 56.5% மானிய சிலிண்டர் பய னாளிகள் 2021-22ஆம் ஆண்டில் 4 அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே மறு சிலிண்டர் களை எடுத்துள்ளனர். 11.3% பேர் ஒன்றை மட்டுமே எடுத்துள்ளனர். 9.6% பயனாளிகள் மறு சிலிண் டரே வாங்கவில்லை. மானிய விலை சிலிண்டர் பயனாளிகள் ஆண்டுக்கு சராசரியாக 3.5 சிலிண்டர்கள் சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்தினர். மானிய விலை சிலிண்டர் அல்லாத பய னாளிகள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 7 சிலிண்டர்கள் வரை பயன்படுத்தி வருவதாக தரவு உள்ளது. முக்கியமாக 2021-22 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியா வில் 30.5 கோடி எல்பிஜி சிலிண் டர் சந்தாதாரர்கள் உள்ளதாக வும், சந்தாதாரர்களுக்கு 179 கோடி சிலிண்டர்கள் விற்கப்பட்ட தாகவும் தகவல் அறிக்கை உள் ளது. ஆனால் சிலிண்டர் மறு நிரப் பல்களுக்கு இடையே ஒரு அப் பட்டமான முரண்பாடு உள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அமைச்சரின் அறி விப்பு மோசடியானது என, மேற் கண்ட விபரங்களை வெளியிட்டு, மானிய சிலிண்டர் திட்டத்தின் உண்மையான நிலவரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது, ஏழைகளின் வயிற்றில் மீண்டும் குரூரமான தாக்குதல் எனச் சாடியுள்ளார்.