states

img

மசூதி ஒலிபெருக்கிகளுக்கு தடை கோரிய மனு பஜ்ரங்தள் அமைப்பிற்கு குஜராத் உயர்நீதிமன்றம் குட்டு

மசூதிகளில் ஒலிக்கப்படும் தொழுகை மற்றும்  இதர பாடல்களால் ஒலி மாசுபாடு ஏற்படுவதாக வும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோச மாக பாதிப்பதாகவும், அதனால்  மாநிலம் முழுவதும் மசூதி ஒலி பெருக்கிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி பஜ்ரங் தள் தலைவர் சக்திசிங்ஜலா குஜராத்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி  சுனிதா அகர்வால் அமர்வில் செவ்வா யன்று விசாரணைக்கு வந்தது.  விசாரணையில் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், ”இது முற்றிலும் தவறான கருத்து. உங்கள் (இந்து) கோவி லில் மேளம் மற்றும் இசையுடன் கூடிய காலை ஆராதனை  அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது. அந்த சப்தங்க ளால் ஒலி மாசுபாடு ஏற்படவில்லையா? கோவில்களில்  உள்ள பெரிய மணிகளால் ஒலி மாசுபாடு ஏற்பட வில்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.  தொடர்ந்து,”மசூதி ஒலிபெருக்கிகளால் மனுதாரர் ஒலி மாசுபாட்டை அளவிடுவதற்கான அறிவியல் முறை கள் இருப்பதாக கூறுகிறார். அதனால் மசூதி ஒலி பெருக்கிகளால் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்ற கூற்றை உறுதிப்படுத்துவதற்கு உறுதியான தரவு அல்லது ஆய்வு முடிவுகளை மனுதாரர் விரைவில் வழங்க வேண்டும்” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்.