அகமதாபாத் மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பொ ருளாதாரம் மிக மோ சமான அளவில் சீர்குலைந்து விட்டது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறி யுள்ளதே மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனை ஆகும். ஆனால் மோடி அரசோ 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டு விட்டதாக அடிக் கடி பொய்யான தகவலை கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இந்நிலையில், நாட்டில் 50% மக்க ளுக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைப்பதாக 21 மாநிலங்க ளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது. 21 மாநிலங்களில் வறுமைக் கோடு தொடர்பான ஆய்வு நடத்தப் பட்டது. “ஏழைகள், நடுத்தர வர்க்கத் தினர், பெரும் பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிட மும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நாட்டில் 44% மக்களுக்கு 3 வேளை யும் உணவு கிடைக்கவில்லை. மாநில அளவில் கணக்கிடும்போது இந்த எண்ணிக்கை சற்று வித்தியா சமாக உள்ளது. நாடு முழுவதும் 21 மிக முக்கியமான மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் நாட்டிலேயே தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஏழைகள், நடுத்தர குடும்பம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் 98% பேருக்கு 3 வேளை யும் உணவு கிடைக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்கள் படுமோசம்
மேலும் இந்த ஆய்வறிக்கை யின் தகவலின் படி,”மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. இதேபோன்று பாஜக ஆட்சி நடைபெறும் உத்த ரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடைசி 5 இடத்தில் உள்ளன. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 97%, கேரளாவில் 98% பேருக்கு 3 வேளையும் உணவு கிடக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 41%, மத்தியப் பிரதேசத்தில் 39%, மகாராஷ்டிரா 34%, ராஜஸ்தா னில் 34%, குஜராத்தில் 33% ஏழை களுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைக்கிறது” என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் நாட்டிற் கே முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உணவு பாதுகாப்புத் துறையிலும் முன்னணியில் இருப்பது ஆய்வு முடிவில் உறுதி யாகி உள்ள நிலையில், அதே நேரம், மோடியின் குஜராத்தில் 69% பேர் போதியளவு உணவில்லா மல் தவித்து வருவது அம்பலமாகி யுள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பணிந்தது உ.பி., பாஜக அரசு
வட மாநிலங்களில் ஒவ் வொரு ஆண்டும் ஜூலை – ஆகஸ்ட் கன் வார் யாத்திரை மேற்கொள் ளப்படுகிறது. உத்தரகண்ட் மாநி லத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவதே கன்வார் யாத்திரை ஆகும். இந்த ஆண்டின் கன்வார் யாத்திரைக்கு செல்லும் பாதைகளில் பெயர்ப் பலகையுடன் உணவுப் பொருள் கடை வைக்க வேண்டும் என்றும், இறைச்சிக் கடை வைக்கக் கூடாது எனபாஜக ஆட்சி செய்யும் உத்தர கண்ட், உத்தரப்பிரதேச மாநில அரசுகள் சர்ச்சைக்குரிய வகை யில் உத்தரவிட்டன. உத்தர கண்ட், உத்தரப்பிரதேசம் அரசு களின் இந்த உத்தரவு முஸ்லிம் மக்களுக்கு மற்றும் அரசியல மைப்புக்கு எதிரானது என காங்கி ரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்தன. இந்நிலையில், எதிர்க்கட்சிக ளின் எதிர்ப்பால் கன்வார் யாத்திரை தொடர்பான உத்தரவு மறுஆய்வு செய்யப்படும் என உத்தரப்பிரதேச மாநில தலைமை செய்தி தொடர்பு அதிகாரி தகவல் தெரிவித்துள் ளார். கன்வார் யாத்திரை தொ டர்பான முறையான உத்தரவு விரைவில் வெளியாகும் என அவர் கூறினார்.