புதுதில்லி, ஏப்.23- வடமேற்கு தில்லியில் உள்ள ஜஹாங்கீர்புரியில், பாஜக கும்பல் கள் நடத்திய சிறுபான்மை இன வேட்டையாடலில், உள்ளூர் மக்கள் தண்ணீர், வெளிச்சம், உணவு இல்லா மல் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் வீடுகள் இடிப்பதைத் தடுத்துள்ளதைத் தொடர்ந்து சி பிளாக் குடியிருப்புவாசிகள் மனிதா பிமானமற்ற திறந்தவெளி சிறையில் ஒடுக்குமுறையை எதிர்கொண்டி ருக்கிறார்கள். வேலைக்குச் செல்லவோ குழந்தைகள் பள்ளிக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. ரம்ஜான் நோன்புக் காலத்தில் கூட வெளியே சென்று தண்ணீர், உணவு வாங்க முடியாத அவலநிலை உள்ளது. அத் தியாவசியப் பொருட்களை வழங்குவதாக அளித்த வாக்குறுதி யை போலீசார் காப்பாற்றவில்லை. வியாபாரிகள் பிளாக்குகளுக்கு தண் ணீர் விநியோகம் செய்தாலும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடி நீர் மற்றும் மின்சாரத்தை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்துவிட்டது. பல கழிவறைகள் இடிக்கப்பட்டுவிட்டன. வன்முறையை தடுக்கவே சி பிளாக் மூடப்பட்டதாக போலீசார் கூறுகின்ற னர்.
‘நாங்கள் அகதிகள் அல்ல’
அதே நேரத்தில், வங்கதேசம் மற் றும் ரோஹிங்கியா அகதிகள் என்ற பாஜகவின் பிரச்சாரத்தை உள்ளூர் மக்கள் நிராகரித்துள்ளனர். பல பத்தாண்டுகளுக்கு முன்பு வங்கத் தில் இருந்து குடியேறியவர்களுக்கு அதிகாரிகள் ஆவணங்களை வழங்கியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் என்றால் எப்படி இந்த நாட்டில் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியும் என் றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சி பிளாக்கில் 30 ஆண்டுகளாக ஆவணங்களுடன் வசித்து வரும் முக மது உசேன் என்பவரது வீட்டையும் புல்டோசர் இடித்து நொறுக்கிவிட் டது. நாற்பது வயதான ரிஹானா பீபி; இவரது நோய்வாய்ப்பட்ட தனது கணவர் மற்றும் குடும்பத்திற்கு உண வளிக்க நடத்திவந்த ஒரு சிறிய உண வகமும் பாஜக நீட்டிய புல்டோசர் கரங்களுக்கு இரையானது. மாநக ராட்சி அளித்த ஆவணத்தைக் காட்டி னாலும் இடிப்பு தொடர்ந்தது. வீடு களை இழந்தவர்களில் எலியாஸ், மெக்கானிக் ஆஷு, விதவைப் பெண் ஹனிபா, பப்லு, முஸ்தபா ஆகியோர் உள்ளனர்.
கல்விச் செலவை மாணவர் சங்கம் ஏற்கும்
ஜஹாங்கீர்புரியில் அதிகார வேட் டைக்கு இரையாகி வாழ்வாதா ரத்தை இழந்தவர்களின் குடும்பங் களை இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் சந் தித்தனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ், தலைவர் வி.பி.சானு, இணைச் செயலாளர் தினித் டெண்டா, மத்திய செயற்குழு உறுப் பினர் நிதிஷ் நாராயணன் ஆகி யோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாஜக வேட்டையாடலில் சுமார் 50 குடும் பங்கள் குறிவைக்கப்பட்டன. பல குடும்பங்கள் அவலநிலையில் வாழ் கின்றனர். பல குடும்பங்களின் குழந் தைகளின் கல்வியே நின்று போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்டவர்கள் மாணவர் சங்கத் தலை வர்களிடம் தெரிவித்தனர். இச்சம் பவத்தால் கல்வி வாய்ப்பை இழந்த வர்களின் கல்விச் செலவை மாண வர் சங்கம் ஏற்கும் எனத் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெரிவித்தனர். மற்ற முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகளும் இதற்கு முன்வர வேண்டும் என்று மாணவர் சங்கத் தலைவர்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.