புதுதில்லி,ஜன.30- 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) துவங்குகிறது. துவக்க நாளன்று நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். பிப்ரவரி 1 ஆம் தேதியன்று நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 2 அன்று முதல் குடியர சுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவை களின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடை பெறும். இதைத் தொடர்ந்து ஒரு மாத காலம் நாடாளுமன்றத்துக்கு விடுமுறை யாகும். அடுத்த கட்ட கூட்டம் மார்ச் 14 அன்று தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறும்.
நடத்தை வரையறை வெளியீடு
கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் நடந்துகொள்வது குறித்த விதிமுறை களை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு இதை வெளியிட்டுள் ளார். உறுப்பினர்களின் நடத்தை குறித்த குழுவின் அறிக்கை 2005 மாரச் 14 அன்று வெளியிடப்பட்டது. அது 2005 ஏப்ரல் 20 அன்று ஏற்கப்பட்டது. இதில் உறுப்பினர் கள் அவை மரபைக் காக்கும் வகையில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும்.
பூஜ்ய நேரம் கிடையாது
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் ஜனவரி 31 அன்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1 அன்றும் கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என நாடாளு மன்ற செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி. 17 ஆவது மக்க ளவை கூட்டத்தொடரின் கூட்டுக் கூட்ட த்தின் முதல் நாள் மற்றும் அதற்கடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் பூஜ்ய நேரம் மற்றும் கேள்வி நேரம் கிடையாது என்றும் மிகவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்த கேள்விகளை பிப்ரவரி 2 அன்று உறுப்பினர்கள் எழுப்பலாம் என்றும் எழுப்ப உள்ள பிரச்சனைகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடைமுறையின் படி கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் தினசரி 60 நிமிடம் நடைபெறும். மக்களவையில் கேள்வி நேரத்துடன் அலுவல் தொடங்கும். மாநிலங்களவை யில் 11 மணிக்கு பூஜ்ய நேரமும் அதைத் தொடர்ந்து கேள்வி நேரமும் தொடங்கு வது நடைமுறையாக உள்ளது.
டிஜிட்டல் பட்ஜெட்
இந்த முறை டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. காகித உபயோகத்தைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் ஆவணமாக பட்ஜெட் உரை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும். முழுவதும் டிஜிட்டல் முறையிலான இந்த பட்ஜெட் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படு கிறது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும் இந்திய மக்களை வேவு பார்த்த பெகாசஸ் பிரச்சனை மீண்டும் வெடித்துள்ள நிலையிலும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்குகிறது. பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் வேகம் காட்டும் மோடி அரசு, மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும் நலிவடைந்து ள்ள சிறு, குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசியல் கட்சி யினர், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் மக்களுக்கான உருப்படி யான திட்டங்களை மோடி அரசு அறி விக்குமா என்பது இந்த கூட்டத்தொட ரில் தெரிந்துவிடும்.