states

15-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது!

புதுதில்லி, ஏப். 5 - அதானியின் ஊழல், ராகுல் காந்தி யின் பதவி பறிப்பு விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் கார ணமாக, 15-ஆவது நாளாக நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதானியின் ரூ. 17 லட்சத்து 80 ஆயி ரம் ஒன்றிய பாஜக அரசு  அதானியின் ஊழல் குறித்த விசார ணைக்கு உத்தரவிட முடியாது என்று  பிடிவாதமாக மறுத்து வருவதால், கடந்த மார்ச் 13 அன்று துவங்கிய  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ரின் இரண்டாவது கட்ட அமர்வுகள் முழுமையாகவே முடங்கியுள்ளன.  இந்நிலையில், 15-ஆவது நாளாக புதனன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடிய நிலையில், தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங் களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்து, இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக் கை வைத்தனர். மக்களவை சபாநாய கர் அருகே சென்று முழக்கத்தில் ஈடு பட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. மாநிலங்களவையும் இதே காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது.  பிற்பகல் 2 மணிக்கு நாடாளு மன்றம் மீண்டும் கூடியபோது, அதானி விவகாரத்தை கிளப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட னர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதுமே ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து 15-ஆவது நாளாக நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கின. முன்பு, இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ என்ற வேவு மென்பொரு ளைப் பயன்படுத்தி இந்திய எதிர்க் கட்சித் தலைவர்களை வேவு பார்த்த மோடி அரசு, 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, ‘காக்னைட்’ என்ற மென்பொருளை ரூ. 1000 கோடி செலவில் வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.