பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல்
இந்திய எல்லையில் 13 பேர் பலி; 59 பேர் படுகாயம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை அன்று அதிகாலை “ஆப ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அமைந் துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுக ணைத் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தா னின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 80 பயங்கர வாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் புதன் கிழமை மாலை அன்று ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொ டர்ந்து வியாழக்கிழமை அன்று காலை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரி ழந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்பட வில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில், “ஆபரேஷன் சிந்தூர்” நட வடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், பார முல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட் டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் பாகிஸ்தான் ராணுவம் தாக்கு தல் நடத்தியது. குறிப்பாக பூஞ்ச் பேருந்து நிலையத்திலும் குண்டுகள் விழுந்தன. எண்ணற்ற வீடுகளும் இடிந்து விழுந்தன. புதன் கிழமை மதியம் வரை தாக்குதல் கடுமை யாக இருந்தது. அதன்பிறகு விட்டுவிட்டு தாக்கு தல் நடந்தது. அதிலும், பூஞ்ச் மாவட்டத்தில் மட்டுமே தாக்குதல் நீடித்ததாகவும், தொடர்ந்து குண்டுகள் வந்து விழுந்ததால், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீற லுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத் தது. அதில், பாகிஸ்தான் தரப்பில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், பூஞ்ச் பகுதியில் பாகிஸ் தான் படைகள் நடத்திய கடுமையான துப்பாக் கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதலில் இதுவரை 13 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து உயிரிழப்புகளும் நிகழ்ந்தி ருப்பதாகவும், காயமடைந்த 59 பேரில் 44 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் வெளியுறவுத்துறை கூடுதல் தகவல் தெரி வித்துள்ளது.