பாக்., ராணுவத்துடன் மோதல் : இந்திய வீரர் மரணம்
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி யில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடை பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரண மடைந்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த முரளி நாயக் எல்லை பாதுகாப்புப்படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். மே 8 அன்று இரவு நடைபெற்ற சண்டையில் இவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது உடல் சனி யன்று அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.