ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கின் தனிச் செயலாளரும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேய பாண்டி யன் ஐஏஎஸ் தனது பணியிலிருந்து திங்க ளன்று விருப்ப ஓய்வு பெற்றார். ஒன்றிய அரசு அவரது ஓய் வுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், வி.கார்த்திகேய பாண்டியன் மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்து பணிக்கு உயர்த்தப்பட் டுள்ளார். இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில்,”மாற்றத்திற்கான முயற்சி களை மேற்கொள்ளும் 5 டி (Transfor mational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி கேபினெட் அமைச்சருக்கு இணை யான பதவி. இனி வி.கே. பாண்டியன் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணி யாற்றுவார்” என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்த 2000ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான வி.கார்த்திகேய பாண்டியன், 2002ஆம் ஆண்டு அம்மாநி லத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும், பின்னர் பல்வேறு மாவட் டங்களில் ஆட்சியராகவும் பணியாற்றி யுள்ளார். கடந்த 2011 முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக வும், அவரது வலது கரமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.