ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், “சுற்றுச்சூழல் மற்றும் மனிதப் பாது காப்பு நிறுவனம் (UNU-EHS) பேரி டர் அபாய அறிக்கை 2023” என்ற பெய ரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது. அந்த ஆய்வறிக்கையில், “இந்தியா வின் வட பகுதியான கங்கைப் படுகையில் உள்ள சில பகுதிகள் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைப்பு முனையை கடந்துவிட்டன. அதாவது 90% அளவில் நிலத்தடி நீரை இழந்துவிட்டன. இதனால் வடமாநிலங் கள் கூடிய விரைவில் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதே போல வடமேற்கு பகுதிகளும் நிலத்தடி நீர் இருப்பு விகிதத்தை வேகமாக இழந்து வரும் நிலையில், வடமேற்கு பகுதிகள் 2025-ஆம் ஆண்டிற்குள் மிகக் குறைந்த நிலத்தடி நீர் வளங்களைக் கொண்டிருக் கும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அறிக்கையில் தென்னிந்திய மாநிலங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.