states

img

“தேர்வுகளை இனிமேல் நேரடியாகவே நடத்த வேண்டும்” – யுஜிசி  

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனிமேல் செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு கிடையாது என யுஜிசி அறிவித்துள்ளது.  

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பல்கலைக்கழக மானியக் குழு இனிமேல் ஆன்லைன் தேர்வு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  இந்த நிலையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார்.  

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக, இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

;