புதுதில்லி, ஜூன் 17 - 2022-ஆம் ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் (Global Peace Index 2022), அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, வங்கதேசத்தை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட 163 நாடுகளில் இந்தியாவுக்கு 135-ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா வும் மிகமோசமான வகையில் 129- ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள் ளது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சிந்தனைக் குழு (International Think-tank the Institute for Economics & Peace -IEP) என்ற அமைப்பானது, ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் என்ற பட்டியலைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் 163 நாடுகளில் நிலவும் உள்நாட்டு வன்முறை, அகதி கள், பயங்கரவாதம், அரசியல் நிலை யற்றத்தன்மை உள்பட 28 அளவு கோல்களை அடிப்படையாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டிற்கான பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், 14-ஆவது ஆண்டாக ஐஸ்லாந்து தொடர்ந்து முத லிடத்தைக் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூசிலாந்து 2-ஆவது இடத்தையும், அயர்லாந்து 3-ஆவது இடத்தையும், டென்மார்க் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு 7-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியா இம்முறை 5-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா, செக் குடியரசு, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள், முறையே 6, 7, 8, 9, 10-ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 7 நாடுகள் வந்துள்ளன. இந்தப் பட்டியலில்தான், இந்தியா மோசமான வகையில் 135-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு 138வது இடத்தை பெற்றி ருந்த நிலையில், தற்போது 3 இடங்கள் முன்னேற்றம் என்றாலும், அண்டை நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. உலக அமைதிக் குறியீட்டில், இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 73-ஆவது இடத்தையும், இலங்கை 90-ஆவது இடத்தையும், வங்கதேசம் 96-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவைக் காட்டிலும் மோசமான 147-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அமைதிக்கான நாடுகள் பட்டி யலில் அமெரிக்காவும் கடும் அடி வாங்கியுள்ளது. உள்நாட்டு அமைதி யின்மை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா 129-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் மற்றொரு முக்கிய நாடான இங்கி லாந்து, இரண்டு இடங்கள் முன்னேறி 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 163 நாடுகளில், 84 நாடுகளில் அமைதி முன்பை விட அதிகமாக சீர்குலைந்துள்ளது; 77 நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சிந்தனைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.