states

img

நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் தேவ் குருங் எம்.ஏ. பேபியுடன் சந்திப்பு

புதுதில்லி, ஜுன் 12- ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் தேவ் குருங் புதுதில்லி ஏகேஜி பவனில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபியை சந்தித்தார். இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-நேபாள இருதரப்பு  உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடைபெற்றது.  சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர்கள் ஜோகிந்தர் சர்மா, அருண்குமார், சிபிஎன்  (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு   உறுப்பினர் லக்ஷ்மன் பந்த் மற்றும் புலம்பெயர்  நேபாள தலைவர் ஆர்.பி.கட்கா ஆகியோரும்  கலந்து கொண்டனர்.  நேபாள பிரதமர் புஷ்பகமல் பிரச்சந்தா சிபிஎன் (மாவோயிஸ்ட்) தலைவராக உள்ளார்.