“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” (என்சிஇஆர்டி) தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது ஒன்றிய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குவதற்காக 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ், பாஜக-வின் துணை அமைப்பு போல மாறிவிட்டது. என்சிஇஆர்டி 11-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம், வாக்கு வங்கி அரசியல் என்பது சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதுடன் தொடர்புடையது. “அனைத்து குடிமக்களின் சமத்துவக் கொள்கைகளை புறக்கணித்து, சிறுபான்மையினரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் கட்சிகள்” என்று வரையறுத்துள்ளது. வாக்கு வங்கி அரசியல் மற்றும் சிறுபான்மையினர் திருப்தி பற்றிய பகுதி மதச்சார் பின்மை பற்றிய ஒரு அத்தியாயத்தில் கூறப்பட் டுள்ளது. அதில் ‘இந்திய மதச்சார்பின்மை மீதான விமர்சனம்’ என்ற பகுதியும் உள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு தெரிவித்துள் ளது.
2023-24-ஆம் ஆண்டு வாக்கு வங்கி அரசியல் என்ற பகுதி சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டு பதிப்பில் சிறுபான்மையினர் திருப்தி என்ற வார்த்தை முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. (Vote Bank Politics: The real question is what precisely the vote is sought for. Is it to promote solely his self-interest or power or is it also for the welfare of the group in question? If the group which voted for the politician does not get any benefit from this act, then surely the politician must be blamed. If secular politicians who sought the votes of minorities also manage to give them what they want, then this is a success of the secular project which aims, after all, to also protectthe interests of the minorities. https://ncert.nic.in/textbook/pdf/keps108.pdf) 2023-24 மற்றும் 2024-25 பதிப்புகளில் வாக்கு வங்கி அரசியல் குறித்து (பக்கம் 124-125) குறித்து எழுதப்பட்டுள்ளது. கேள்வி ஒன்று தான். பதில் தான் வேறாக உள்ளது. அதாவது சிறுபான்மையின் உரிமை, நலன் குறித்து பேசுபவர்கள், மற்ற குழுக்களின் நலன், உரிமைகளைப் போல் (கோரிக்கைகள்) சிறுபான்மை மக்களின் உரிமைகள் வேண்டும் என்று தேடினால் என்ன செய்வது? “இந்த மதச்சார்பற்ற அரசியல்வாதிகளால் பெரும்பான்மையினரின் நலன்கள் அதாவது குழிதோண்டி புதைக்கப்பட்டால் என்ன செய்வது? இதனால் ஒரு புதிய அநீதி பிறக்கிறது. 2023-24ஆம் ஆண்டு புத்தகத்தில் “ஒன்று, இரண்டு அல்ல, ஆனால் முழு அமைப்பும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளது என்று நீங்கள் கூற முடியுமா? நன்றாக யோசித்தால், இது இந்தியாவில் நடந்ததற்கான சிறிய ஆதாரங்கள் இருப்பதைக் காணலாம். “வாக்கு வங்கி அரசியலில் எந்த தவறும் இல்லை”. மதச்சார்பற்ற கட்சிகளும் வாக்கு வங்கிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், சிறுபான்மை யின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அனைத்துக் கட்சிகளும் சில சமூகக் குழுக்களும் திட்டமிட்டு அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்றன எனக் கூறுகிறது.
2024-2025-ஆம் ஆண்டு புத்தகத்தில், இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதோடு தொடர்புடையது என்று பகிரங்கமாகக் கூறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் எந்தத் தவறும் இருக்காது, ஆனால் தேர்தலின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு மொத்தமாக வாக்களிக்க ஒரு சமூகக் குழுவைத் திரட்டுவதற்கு வாக்கு வங்கி அரசியல் வழிவகுக்கும் போது, அது தேர்தல் அரசியலை சிதைக்கிறது. இந்தியாவில், அரசியல் கட்சிகள், முக்கியமான விஷயங்களைப் புறக்கணிப்பது, தேர்தல் ஆதாயங்களுக்காக, சமூகம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகளைப் புறக்கணிப்பதற்காக, உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைக் காணமுடிகிறது. இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதோடு தொடர்புடையது. அரசியல் கட்சிகள் அனைத்து குடிமக்களின் சமத்துவக் கொள்கைகளை புறக்கணித்து சிறுபான்மைக் குழுவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன என்பதே இதன் பொருள். இதில் முரண்பாடு என்னவென்றால் இப்படிச் செய்வதன் மூலம் சிறுபான்மைக் குழுக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கும் ஓரங்கட்டு வதற்கும் வழிவகுத்தது. வாக்கு வங்கி அரசியல் சிறுபான்மைக் குழுவிற்குள் உள்ள பன்முக த்தன்மையை ஒப்புக் கொள்ளத் தவறியதால், இந்தக் குழுக்களுக்குள் சமூக சீர்திருத்தப் பிரச்சனைகளை கையாள்வது கடினமாக உள்ளது” என்று பாடநூல் கூறுகிறது. என்சிஇஆர்டியின் கூற்றுப்படி, பழைய பதிப்பில் உள்ள பிரிவு “வாக்கு வங்கி அரசியலை மட்டுமே நியாயப்படுத்துவதை நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது”. ஆனால், 2024-2025-ஆம் ஆண்டு புத்தகத்தில் வாக்கு வங்கி அரசியல் என்பதையும் தாண்டி சிறுபான்மை மக்களை குறிவைத்து எழுதியுள்ளது.
குஜராத் கலவரம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற சில நிகழ்வுகளை என்சிஇஆர்டி பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவது என்றமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத்சக்லாணி, “குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்கள் அதைத் தொடர்ந்து நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை பாடப்புத்தகத்தில் வைப்பதன் மூலம் மக்கள் “மனச்சோர்வடைவதைத் தவிர்க்கவே” மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியதோடு, இது போன்ற மாற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களை மறு சீரமைப்பு செய்வதன் ஒரு பகுதி தான் என்றார். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அயோத்தி பிரச்சனை தொடர்பான பாடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலாக மாறிப்போன என்சிஇஆர்டியின் வாக்கு வங்கி அரசியல் குறித்து அறிந்து கொள்ள வாசகர்கள் https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=secularism.pdf, https://ncert.nic.in/textbook/pdf/keps108.pdf என்ற இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்
- தி வயர் தகவல்களுடன்