states

img

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது ம.பி., உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது ம.பி., உயர்நீதிமன்றம் உத்தரவு

மே 4ஆம் தேதி நாடு முழுவ தும் இள நிலை மருத்துவப் படிப்பிற் கான நீட் தேர்வு நடைபெற் றது. ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநி லம் இந்தூரில் மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்ட தால் தன்னால் சரியாக தேர்வை எழுத முடியாமல் போ னதாக மாணவி ஒருவர் அம் மாநில உயர்நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை யின் போது மாணவி தரப் பில் ஆஜரான வழக்கறிஞர் மிருதுள் பட்நாகர்,“இந் தூர் மட்டுமின்றி மாநிலத் தின் பலதேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சில தேர்வு மையங்களில் மெழுகுவர்த்தி வைத்து மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதனைக் கேட்டு கோபம டைந்த நீதிபதி சுபோத் அப யங்கர்,”நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த கட்ட விசாரணை ஜூன் 30ஆம் தேதி அன்று நடைபெறும். அது வரை நீட் தேர்வு முடிவு களை வெளியிடக் கூடாது. மேலும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தேசிய தேர்வு முகமை, ஒன்றிய அரசு மற்றும் மத்தியப் பிர தேச மேற்கு மண்டல மின்சார விநியோக நிறுவனம் விளக் கம்அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டார்.  21 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியா கும் எனக் கூறப்படும் நிலை யில்,ஜூன் 30ஆம் தேதி வரை தேர்வு  முடிவை வெளி யிடக் கூடாது என மத்தியப்  பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் திட்ட மிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.