states

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம் மாயமாகும் பெண் குழந்தைகள்

மாநிலங்கள்    காணாமல் போன    பெண் குழந்தைகளின்
                           மொ. குழந்தைகள்    எண்ணிக்கை
ம. பிரதேசம்             61,102                            49,024
மே.வங்கம்                49,129                           41,080
கர்நாடகா                27,528                            18,893
குஜராத்                      20,081                           16,432
தில்லி                         22,964                            15,365

புதுதில்லி, ஜூலை 30- பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்  களில் பெண்கள், தலித்கள் மீதான  தாக்குதல்கள் அதிகரித்து, அவர் களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்  நிலவுவதை தேசிய குற்ற ஆவணக்  காப்பகத்தின் தகவல்கள் வெளிப்படுத் தின. அதைத்தொடர்ந்து பெண்கள் மற்  றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்ச கம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம்  பெண் குழந்தைகளுக்கும் பாஜக ஆட்சி யில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்  பதை அம்பலப்படுத்தியுள்ளது.  அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு களின் படி 2018 ஜனவரி 1 முதல் 2023 ஜுன்  30 வரை 2 லட்சத்து 75 ஆயிரத்து 125 குழந்தைகள் காணாமல் போயுள்ளன. இதில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 825 குழந்தைகள் பெண்குழந்தைகள் ஆவர். மாநில வாரியான பட்டியலில் முதல் இடத்தில் பாஜக ஆட்சி செய்  யும் மத்திய பிரதேசமும் இரண்டாவது இடத்தில் மம்தா ஆட்சி செய்யும் மேற்கு  வங்கமும் மூன்றாவது இடத்தில் பாஜக  ஆட்சி செய்த கர்நாடாகவும் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியப்  பிரதேசத்தில் மொத்தம் 61,102 குழந்  தைகள் காணாமல் போயுள்ளனர்.  

இதில் 49,024 பெண்குழந்தைகள். மேற்கு வங்கத்தில் காணாமல் போன  49,129 குழந்தைகளில் 41,808 பேர்  பெண் குழந்தைகள். கர்நாடகாவில் காணாமல் போன 27,528 குழந்தை களில் 18839 பேர் பெண்குழந்தைகள்.குஜராத்தில் 20,081 குழந்தைகள் காணா மல் போயுள்ளன. இதில் 16,432 பெண் குழந்தைகள். தில்லியில் காணாமல் போன 22,964 குழந்தைகளில் 15,365 பேர் பெண்குழந்தைகள். இன்று ஒன்றிய பாஜக அரசால் சூறையாடப்பட்டு, அமைதியை இழந் துள்ள மணிப்பூர் உட்பட அருணாச் சலப்பிரதேசம், நாகாலாந்து ஆகிய  வடகிழக்கு மாநிலங்களில் குழந்தை கள் காணாமல் போனதாக ஒரே ஒரு வழக்குதான் பதிவாகியுள்ளது. கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றிய அர சால் விளம்பரம் செய்யப்படுகிறதே தவிர, பெண்குழந்தைகளை பாதுகாக்க  எந்தவொரு ஆக்கப்பூர்வமான நட வடிக்கையையும் எடுக்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு முறை யான கவனிப்பும் பாதுகாப்பும் கொடுக்  கப்படுவதில்லை என தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை யத்தின் முன்னாள் ஆணையர் பேராசிரி யர் சாந்த சின்ஹா குற்றம் சாட்டி யுள்ளார். காணாமல் போன 2 லட்சத்து 75 ஆயிரத்து 125 குழந்தைகளில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 502 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 786 பேர் பெண்  குழந்தைகள், 66 ஆயிரத்து 638 பேர் ஆண் குழந்தைகள் ஆவர்.