ஒடிசாவில் மக்களவை தேர்த லோடு சட்டமன்ற தேர்தல் நடை பெற்ற நிலையில், வாக்கு எண் ணிக்கை முடிவில் பாஜக 78 இடங்களை கைப்பற்றி முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. 25 வருடங்களாக மாநி லத்தை ஆட்சி செய்த பிஜு ஜனதா தளம் 51 இடங்களை கைப்பற்றி தோல்வியை தழுவிய நிலையில், செவ்வாயன்று நடை பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மோகன் மாஜி ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வ ராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து புதனன்று புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் மோகன் மாஜி ஒடிசா மாநில முதல்வராக பதவியேற்றார். அவ ரோடு கே.வி. சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாகவும், மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிர மாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.