மோடியின் செல்வாக்கு மங்கத் துவங்கிவிட்ட கவலை யுடன் பாஜக அரசு 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கி றது. அரசின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளிலும் பிரச்சாரங்களி லும் பிரதமர் மோடி மட்டுமே முன்னிலையில் இருந்தாலும், பா.ஜ.க வில் அதிருப்தி நிலவுகிறது. மோடி நேரடியாக பிரச்சாரம் செய்தாலும் 2018 உடன் ஒப்பிடும்போது கர்நாடகாவில் பாஜக 38 இடங்களை இழந்தது. இது மட்டுமல்ல, இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. திரிபுராவில் பாஜக 10 சதவிகித வாக்கு களை இழந்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேகா லயாவில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. வலு வான போட்டியை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லாத குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இது மட்டுமே பாஜகவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளது.
2019-க்குப் பிறகு நடைபெற்ற தில்லி, கேரளா, தமிழ் நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய சட்டமன்றத் தேர்தல்க ளில் பாஜக வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள் ளது. பீகார் கையில் இல்லை. மோடிக்குப் பிறகு, பாஜகவின் பிரச்சார நட்சத்திரங்களான அமித் ஷா, யோகி ஆதித்ய நாத் ஆகியோரால் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு வெளியே அதிக வாய்ப்பை உருவாக்க முடியவில்லை. பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் இமாச்சல் மாநிலமும், அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் கர்நாடகா மாநிலமும் தோல்வியை அளித்தன. பாஜக ஆளும் மணிப் பூர் இன மற்றும் வகுப்புவாத வன்முறையில் சிக்கித் தவிக் கிறது. ஜம்மு-காஷ்மீரில் அமைதி வெகு தொலைவில் உள் ளது, அங்கு ஒன்றிய அரசு பல சோதனைகளை நடத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், கருப்புப் பண வேட்டையும் படுதோல்வி அடைந்துள்ளன. விவசாயிக ளுக்கு அளித்த எந்த உறுதிமொழியும் காப்பாற்றப் படவில்லை. மிகுந்த ஆரவாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் குறியீடுகளை முடக்குவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இந்தத் துறையை வைத்திருக்கும் நிதின் கட்காரி, இப்போது பாஜக தலைமைக்கு விருப்பமானவர் அல்ல. தேசாபிமானியில் சாஜன் ஏவ்ஜினி