states

நாடாளுமன்ற புதிய கட்டடம் இன்று திறப்பு!

புதுதில்லி, மே 28 - தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிதாகக் கட்டப் பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை, ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் திறந்து வைக்கிறார். நாடாளுமன்றப் புதிய கட்டடத்  திறப்பு விழா இரண்டு பகுதிகளாக நடை பெறுகிறது. புதிய நாடாளுமன்ற கட்ட டமானது, இந்து சாஸ்திரங்களின்படி, ஸ்ரீசக்ரத்தில் உள்ள மையம், மூல பிந்து  முக்கோண வடிவத்தில் கட்டப்பட்டுள்ள நிலையில், காலை 7 மணி முதல் 9 மணி  வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  காந்தி சிலைக்கு அருகே, ஹோமம்  வளர்த்து, வேதங்கள் முழங்க மதச் சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடை பெறுகின்றன. இதற்காக நாடு முழுவதி லும் இருந்து வரவழைக்கப்பட்ட 40 சாமி யார்கள் இந்த மதச் சடங்குகளில் பங்  கேற்கின்றனர். அதன்பிறகு, தமிழ்நாட்டின் திருவா வடுதுறை ஆதின கர்த்தர், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வுக்கு வழங்கிய 5 அடி உயரம் கொண்ட,  தங்கத்தால் செய்யப்பட்ட செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்  படுகிறது. இதற்காக, தமிழ்நாட்டில் இருந்து 21 ஆதினங்கள், சனிக்கிழ மையே தில்லிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, திருவாவடு துறை ஆதினம் 24-ஆவது ஸ்ரீலஸ்ரீ குரு மகாசந்நிதானம் தனி விமானம் மூலம் தில்லி அழைத்துவரப்பட்டு உள்ளார்.  செங்கோலும் அலகாபாத் அருங் காட்சியகத்தில் இருந்து தில்லிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனை  ராஜ மேளம் முழங்க எடுத்துவரும் ஆதி னங்கள், புனித நீரால் தூய்மைப்படுத்தி பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள னர்.

வழிபாடு, சடங்குகளுக்குப் பின்,  பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை  சபாநாயகர் ஓம் பிர்லாவும், புதிய நாடா ளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்  கின்றனர். பின்னர், காலை 11.30 மணிக்கு  மேல் மக்களவை அறையில் தேசிய  கீதத்துடன் இரண்டாம் பகுதி விழா  தொடங்குகிறது. தொடர்ந்து, பிற்பகல்  ஒரு மணிக்கு 75 ரூபாய் நாணயத்தை பிர தமர் மோடி வெளியிடுகிறார். நிகழ்ச்சி யின் தொடக்க உரையை மக்களவை சபாநாயகரும், இறுதி உரையை பிரத மரும் நிகழ்த்துகின்றனர். அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறி, இந்த நாட்டின் குடியரசுத் தலை வரை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு, நாடா ளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்படுவ தால், விழாவைப் புறக்கணிப்பதாக, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.  இதனால், ஆளும் தேசிய ஜனநாய கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 17  சிறிய கட்சிகள் மற்றும் பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மதச்சார்  பற்ற ஜனதாதளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலை வர்கள், மடாதிபதிகள், சினிமா பிரப லங்கள், விளையாட்டுத்துறை பிர பலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்  னாள் பிரதமர் தேவகவுடா, மாநிலங்க ளவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ள னர்.

திறப்பு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள முக்கியச் சாலைகள் காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏசிபி ரேங்க் அளவிலான அதி காரிகள், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி அமைக்கப் பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வருகின்றனர்.

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷ னால் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்ட மல் யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மகளிர் பஞ்சாயத்து அமைப்பி னர் அறிவித்துள்ளதால், தில்லி யை இணைக்கும் பஞ்சாப், ஹரி யானா உள்ளிட்ட அண்டை மாநி லங்களின் எல்லைப் பகுதிகளில்  பல அடுக்கு சோதனைச் சாவ டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வுகள், அனைத்து  தூர்தர்ஷன் (DD) சேனல்களி லும், தூர்தர்ஷனின் அதிகா ரப்பூர்வ யூ-டியூப் சேனலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்ப ளவில், ரூ. 971 கோடி ரூபாய் செல வில் கட்டப்பட்டுள்ள புதிய நாடா ளுமன்றக் கட்டடத்தில், மக்க ளவை, மாநிலங்களவை கூடு வதற்காக தனித்தனி அரங்கங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்க ளும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகை யில் நவீன வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள்  அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.