states

img

ஜார்க்கண்டில் பாஜகவின் “ஊடுருவல்” பிரச்சார உத்தி பலனளிக்கவில்லை!

ராஞ்சி ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கட்சி பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க வங்க தேச மக்கள் ஊடுருவல் என்ற பிரச்சார உத்தியை கையாண்டது. ஆனால் இது வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள 28 பட்டியல், பழங்குடியினர் ஒதுக்கீட்டு தொகுதி களில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக 26 இடங்களை இழந்தது. பரவலான தோல்வி சந்தல் பர்கானா, கோல்கான், தெற்கு சோட்டா நாக்பூர் மற்றும் பலமு பகுதிகளில் பாஜக 25 இடங்களில் போட்டியிட்டது. ஜேஎம் எம்-லிருந்து விலகிய சம்பாய் சோரன் மட்டுமே செரைகல்லாவில் வெற்றி பெற்றார். ஆனால் குந்தி மற்றும் டோர்பா தொகுதிகளை பாஜக,  ஜேஎம்எம்மிடம் இழந்தது. 2019-இல் எஸ்டி தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற மூன்று இடங்கள் இப்போது ஒன்றாகக் குறைந்துள்ளது.

“இந்தியா” கூட்டணியின் வெற்றி

மேற்கு வங்க எல்லையோரமாக அமைந்துள்ள சந்தல் பர்கானா பகுதியில் இந்தியா கூட்டணி 52 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2019 உடன் ஒப்பிடுகையில் அனைத்து இடங்களிலும் வாக்கு வித்தியாசம் 12 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கோட்டைகள் கைநழுவின

ராஜ்மஹால், சரத் மற்றும் கோடா ஆகிய பொதுத் தொகுதிகளையும் பாஜக இழந்தது. 2009 முதல் பாஜகவின் கோட்டையாக இருந்த ராஜ்மஹாலில் ஜேஎம்எம் வேட்பாளர் முகமது தாஜுதீன் 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2014, 2019இல் பாஜக வென்ற எஸ்சி தொகுதியான தியோகரை ஆர்ஜேடியிடம் இழந்தது. கூட்டணி பலம் ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி சந்தல் பர்கானா பகுதியில் 18-இல் 17 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. முந்தைய இரு தேர்தல் களில் காங்கிரஸ் வென்ற ஜார்முண்டியில் மட்டும் பாஜக முன்னிலை பெற்றது. தோற்றுப்போன பாஜகவின் பிரச்சார உத்தி பாஜகவின் ஊடுருவல் பிரச்சாரம் பழங்குடி யினரின் அடையாளத்துக்கு அச்சுறுத்தல் என்று சித்தரித்தது. மக்கள்தொகை மாற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நிலம் பறிபோகும் அபாயம், கலாச்சார சீரழிவு போன்ற அச்சுறுத்தல்களை முன்வைத்தது. “ஏக் ஹைன் தோ சஃபே ஹைன்” என்ற முழக்கத்துடன் “ரோட்டி, பேட்டி, மாட்டி” என்ற வாக்குறுதிகளை யும் இணைத்தது.

முறியடிக்கப்பட்ட பிளவுபடுத்தும் முயற்சி

ஜேஎம்எம் மூன்று வழிகளில் எதிர்வினை யாற்றியது, ஊடுருவல் தடுப்பில் மோடி அர சின் தோல்வியைச் சுட்டிக்காட்டியது, பழங்கு டியினருக்கு எதிரான அட்டூழியங்களுக்கு பாஜக பிரச்சாரகர்களே காரணம் என்று கூறியது, மாநிலத்தை பிளவுபடுத்த பாஜக முயல்வதாக விமர்சித்தது. கட்சி தாவலும் பலனளிக்கவில்லை பாஜகவிற்கு தாவிய பிரமுகர்களும் தோல்வியடைந்தனர். திருமதி சீதா முர்மு சோரன் ஜம்பாராவில் 43,000 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டா பொற்காவில் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இறுதி அடி தெற்கு சோட்டா நாக்பூரில் ஆர்எஸ்எஸ்-வனவாசி கல்யாண் அமைப்புகளின் பிரச்சார மும் பலனளிக்கவில்லை. 11 எஸ்டி தொகுதி களில் ஒன்றுகூட பாஜகவிற்கு கிடைக்க வில்லை. மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற “ஏக் ஹைன் தோ சபே ஹைன்” முழக்கம் ஜார்க்கண்டில் தோல்வியடைந்தது.

-அபினவ் லக்ஷ்மண்
தி இந்து (ஆங்கிலம்) 24/11/24 
தமிழில் : கடலூர் சுகுமாரன்