மேற்கு வங்கத்தில் இடது முன்னணி, திரிணா முல் காங்கிரஸின் அட்டூழியங்களையும், பாஜகவின் வகுப்புவாத பிரிவினை முயற்சி களையும் முறியடிக்கும் இயக்கங்களை நேரடியாக முன்னெடுத்து வருகிறது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மீனாட்சி தலைமை யிலான பிரச்சாரம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வரு கிறது. எங்கும் ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள் கூட்டம். இரவு வெகுநேரம் ஆனாலும் மீனாட்சிக்காக மக்கள் கூட்டம் அலைமோதும். இடது முன்னணியின் கருத்துக்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பிரச்சாரம் செய்யப் படுகின்றன. மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு களை முன்னணி முன்வைக்கிறது. இந்தியிலும் வங்க மொழியிலும் சரளமாக வரும் வார்த்தைகள் மக்களை நெகிழச்செய்கின்றன. மீனாட்சியின் மென்மையான மற்றும் உணர்ச்சிமிக்க பேச்சாற்றல் அவரை தனித்துவ மாகக் காட்டுகிறது. வங்கத்தின் மகள் மம்தா அல்ல, மீனாட்சி என்று மக்கள் ஆர்ப்பரித்து முழக்கமிடு கிறார்கள். 2023 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டிஒய்எப்ஐ மாநிலம் முழுவதும் நடத்திய இன்சாப் ஜாதாவின் (நீதி அணிவகுப்பு) தலைவராக மீனாட்சி இருந்தார். இந்த அணிவகுப்பிலும் பேரணியிலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. கூச்பீகா ரில் இருந்து தொடங்கி 2,200 கி.மீட்டருக்கும் அதிக மான தூரத்தை கடந்து, 2024 ஜனவரி 7 அன்று கொல் கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் மாபெரும் பேரணியுடன் முடிவடைந்தது. இந்த பேரணியை மேற்குவங்கத்தின் எதிர்காலத்தின் குறியீடாக ஊடகங்கள் வர்ணித்தன. சிபிஐ-எம் மாநிலக் குழு உறுப்பினரான மீனாட்சி, பர்துவான் மாவட்டத்தில் உள்ள துர்காபூரில் தொழி லாள வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி ஆசிரி யர் வேலையை விட்டுவிட்டு முழுநேர அரசியல் வாதியானார்.