states

விவாகரத்துக்கு 6 மாத கட்டாயக் காத்திருப்பை தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம்!

புதுதில்லி, மே 1 - பரஸ்பரம் பிரிய விரும்பும் தம்பதி களை சட்டப்பிரிவு 142-ன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்காமலேயே விவாகரத்து வழங்க லாம்; 6 மாத கட்டாயக் காத்திருப்பு காலத்தை தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் கணவன் மனைவி இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்துகொள்ள விரும்பினாலும், இந்த விவாகரத்தைப் பெற 6 மாதங்கள் கட்டாய காத்திருப்பு கால மாக இருக்கிறது.  இந்நிலையில், பரஸ்பர சம்மதத்து டன் விவாகரத்து கோரி விண்ணப் பிக்கும் போது, இந்து திருமணச் சட்டத்தின் ‘13பி’ பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள கட்டாயக் காத்திருப்பு காலத்தை உச்ச நீதிமன்றம் 142-வது பிரிவின் கீழ் தள்ளுபடி செய்ய முடியுமா? என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதாவது, குடும்பநல நீதி மன்றங்களில் நடக்கும் நீண்ட விசார ணைகளைத் தவிர்த்து, பரஸ்பர  சம்மதம் இருந்தால் நேரடியாக விவா கரத்து தர, சட்டத்தில் இடமுள்ளதா? என்று கேட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையில், சஞ்சீவ்  கண்ணா, ஏ.எஸ். ஒகா, விக்ரம் நாத் மற்றும் ஜே.கே. மகேஸ்வரி ஆகிய  ஐந்து நீதிபதிகள் அடங்கிய அர சியல் சாசன அமர்வில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்மீதான வாதங்கள் முடி வடைந்த நிலையில், 2022 செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “மீண்டும் ஒன்றுசேரவே முடியாத மணமுறிவு என்ற சூழலில், பரஸ்பர சம்மதம் இருந்தால் குடும்ப நல நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தால் விவா கரத்து வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். இது பொது மக்களின் அடிப்படைக் கொள்கைகளை மீறாது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது சட்டப் பிரிவின் கீழ் விவாகரத்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதி காரங்களைப் பயன்படுத்த முடியும். இதில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கவே செய்கிறது. அதேநேரம் பிரிவு 142 அடிப்படை உரிமைகள் கீழ் பரிசீலிக்கப்பட வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம்’’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.