திடீரென பல்டி அடித்த மம்தா
ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வில்லை என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர் நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங் கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜேஎம்எம் - காங் கிரஸ் கூட்டணி ஆளும் ஜார்க் கண்ட் மாநிலத்தின் ஹேமந்த் சோரன் 8 மாநில முதல்வர்கள் அறிவித்தனர். தொடர்ந்து வியாழனன்று மேற்கு வங்க முதல்வரும் மம்தா பானர்ஜி ஜூலை 27 அன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித் தார். ஆனால் திடீரென வெள்ளியன்று, “பிரதமர் மோடி தலைமையில் நடை பெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, ஒன்றிய அரசின் பாகு பாட்டை கண்டிப்பேன்” என மம்தா பானர்ஜி பல்டி அடித்துள்ளார்.
கார்கில் வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்: முதலமைச்சர்
சென்னை, ஜூலை 26- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ் வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25 ஆம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதி களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கார்கில் வெற்றி தினத்தில் தேசத்தை காத்த வீரர்கள் வீரத் தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் தள பதிவில், “25-வது கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணை யற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த வீரர்களின் வீரத்தையும் தியா கத்தையும் போற்றுவோம். நமது சுதந்தி ரத்தை பாதுகாப்பதில் அவர்களின் வீரத் தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர் வோம்” என்று தெரிவித்துள்ளார்.
விஷ சாராய உயிரிழப்புக்கு இழப்பீடு அரசின் முடிவில் தலையிட நீதிமன்றம் மறுப்பு
சென்னை, ஜூலை 26- கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து குமரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மக்களின் வரிப்பணத்தை சட்டவிரோதமாக விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக பயன் படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் முடிவில் நீதிமன்றம் தலை யிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஐ பேட் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்
சென்னை, ஜூலை 26- திருபெரும்புதூரில் உள்ள ஆலையில் ஐ பேட் களையும் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட் டுள்ளது. 2 ஆண்டு காலத்தில் திருபெரும்புதூர் தொழிற் சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ் கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பால் மன்னிப்பு கேட்ட எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஜூலை 26- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின் அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டு தனது ஆதரவாளர் களை கொண்டு பொதுச் செயலாளர் பதவி யை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி னார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்தி லிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அதி முக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச் செயலாளர் என எப்படி குறிப்பிடலாம். இணை ஒருங்கிணைப்பா ளர் என முன்பு மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி தற்போது பொதுச் செயலாளர் என மனுவில் குறிப்பிட்டதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பி கண்டித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை எப்படி பதிவுத் துறையில் பதிவு செய்தீர்கள் என உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்த மனுவை தாக் கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப் பிற்கு உத்தரவிட்டார்.வழக்கு விசாரணை யை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, ஜூலை 26- மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசை யில் இது நகரும் என்றும் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரை கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும். மேலும் வலுவான தரைக் காற்று 30- 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்கள் நகர்ந்தாலே சுட்டுக்கொல்லும் இஸ்ரேல்
காசாவில் உள்ள கான்யூனிஸின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ஸ்னைப்பர்கள் பாலஸ்தீனர்கள் நடந்து போனாலே சுட்டுப் படுகொலை செய்து வருவதாக அங்குள்ள தாரேக் அபு அஸூம் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த தடை செய்யப்பட்ட மனிதாபிமான பகுதிகளில் தற்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிக வெப்பநிலையை சமாளிக்க ஐ.நா. அழைப்பு
அதிக வெப்பநிலை ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் நடந்த நிகழ்வு அல்ல. பூமி மிகவேகமாக வெப்பமயமாகி வருவது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். கோடிக்கணக்கான மக்கள் தீவிரமான வெப்பத் தொற்று நோயை எதிர்கொள்கின்றனர். தீவிர வெப்பநிலையை சமாளிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
நேபாள விமான விபத்து கருப்புப் பெட்டி மீட்பு
நேபாளத்தில் விபத்துக்குள்ளான தனியார் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைப்பின் இணை இயக்குநர் தெரி வித்துள்ளார். ஜூலை 24 அன்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தற்போது இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலாவுக்கு ஆதரவை உறுதி செய்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலாவிற்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளார் ஒபாமா. துவக்கத்தி லேயே அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்த போதிலும் இரு நாட்களுக்கு முன் கமலாவை டிரம்ப் எளிதில் வீழ்த்தி விடுவார் என ஒபாமா கூறியதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் தனது நிலைபாட்டை ஒபாமா உறுதிப்படுத்தியுள்ளார்.